Sunday, June 23, 2013

பாட்டி மருத்துவம்..

பாட்டி  மருத்துவம்..

* மாதுளைச் சாறு தினமும் குடித்து வந்தால் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
* பொடி செய்த ஓமத்தை பாலில் கலந்து வடிகட்டி படுக்கும் முன் குழந்தைகளுக்குக் கொடுத்தால் சளியை தூர விரட்டும்.
* திராட்சையை பன்னீரில் ஊறவைத்துச் சாப்பிட்டால் இதயம் பலம் பெறும். தொடர்ந்து திராட்சை உண்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி நிச்சயம்.
* வயிற்றுப்போக்கு அதிகமாக இருந்தால் ஜவ்வரிசியை சாதம் போல வைத்து மோரில் கரைத்து உப்புப் போட்டுச் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும்; வயிற்று வலியும் இருக்காது.
* குழந்தைகள் ஞாபகசக்தியுடன் இருக்க வேண்டுமானால் தினமும் காலை உணவுக்குப் பின் வெந்நீரில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடிக்க வையுங்கள்.

Wednesday, June 12, 2013

தேங்காய் எண்ணெயின் பயன்கள்

தேங்காய் எண்ணெயின் பயன்கள் பல

தென்னை மரம் என்றாலே அது பல வகைகளில் மனிதனுக்கு உபயோகமாக உள்ளது.
அதிலும் தேங்காயில் இருந்து பெறப்படும் தேங்காய் எண்ணெய் மனித வாழ்க்கையோடு ஒன்றிப்போன ஒரு விஷயமாகும்.
பொதுவாக நமது தலைச் சருமத்தைப் பாதுகாக்க அடிப்படையான விஷயம் என்றால் அது தேங்காய் எண்ணெய் தான்.
வறண்ட சருமத்திற்கு தேங்காய் எண்ணெய்தான் மிகச் சிறந்த மருந்தாகும். குளிர் காலத்தில் பொதுவாக அனைவரது சருமமும் வறண்டு போய்விடும். அந்த சமயத்தில் கை, கால்களில் தேங்காய் எண்ணெய் தடவுவது நல்லது.
வெப்பத்தால் பாதிக்கப்படும் சருமத்திற்கு அருமருந்தாக இருப்பது தேங்காய் எண்ணெய் தான்.
புண்களில் நீர்த்தன்மையை அகற்றி அது விரைவாக ஆறுவதற்கு தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது.
தலை முடியின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருப்பது தேங்காய் எண்ணெய். தேங்காய் எண்ணெயை தடவ பிடிக்காதவர்கள் கூட, இரவில் தேங்காய் எண்ணெய் வைத்து காலையில் தலைக்குக் குளித்து விடலாம்.
உதடுகள் உலர்ந்து போகாமல் இருக்க உதவும் நல்ல லிப் பாம் ஆக இருப்பதும் தேங்காய் எண்ணெய் தான்.
தேங்காய் எண்ணெய் அல்லது தேங்காய் விழுதை முகத்திற்குப் பயன்படுத்தலாம். நல்ல பலனை அளிக்கும்.
தலைப் பொடுகை நீக்க, தேங்காய் எண்ணெயுடன் சில சொட்டு எலுமிச்சை சாறை விட்டு அதை வைத்து தலைக்கு மசாஜ் செய்யுங்கள். சிறிது நேரம் ஊறவிட்டு பிறகு தலைக்கு குளியுங்கள். இவ்வாறு ஒரு வாரத்தில் 2 முறை செய்தால் பொடுகு நீங்கிவிடும்.
சளித் தொந்தரவு உள்ளவர்கள், தேங்காய் எண்ணெயை நன்கு சூடாக்கி இறக்கி அதில் ஒரு சிறிய கட்டி கற்பூரத்தைப் போட்டு வெதுவெதுப்பாக எடுத்து நெஞ்சுப் பகுதிகளில் தடவினால் நிவாரணம் கிடைக்கும்.
வறண்ட சருமம் மற்றும் வறண்ட கூந்தலுக்கு தேங்காய் எண்ணெய் நன்மை அளிக்கும்.

இரும்புச் சத்துள்ள இயற்கை உணவுகள்

இரும்புச் சத்துள்ள இயற்கை உணவுகள்


சமைக்கும் போது சூடுபடுத்துவதாலும், சில சுவையூட்டிகளைப் பயன்படுத்துவதாலும் உணவின் உண்மையான சத்துக்கள் நசிந்து போய்விடுகின்றன. அதிலும் பள்ளி படிக்கும் பருவத்து பெண்கள் பெரும்பாலும் ரத்தசோகை நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சில எளிய இயற்கை உணவை தயாரித்து சாப்பிடலாம்.
பீட்ரூட் பயாசம்: சிறிய பீட்ரூட் ஒன்றை சுத்தமாஙகக, தோல் அகற்றி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் ஜூஸ் எடுத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதனுடன் அரை மூடி தேங்காய்ப் பால் கலந்து, சுவைக்குவெல்லம் மற்றும் ஏலக்காய், முந்திரி சேர்த்துக் கொள்ளலாம். இது பள்ளி படிக்கும் பருவத்து பெண்கள் தினமும் குடிக்கலாம்.
முருங்கைக்கீரை சூப்: கைப்பிடி அளவு முருங்கைக்கீரையுடன் நான்கு பல் பூண்டு, மிளகு, சீரகம், தோல் நீக்கிய இஞ்சி, உப்பு ஆகியவற்றைக சேர்த்து, நசுக்கிக் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம். அசத்தலான இருப்பு சக்திக்கான சூப் ரெடி.
இரத்தம் அதிகரிக்கும் பழ சாலட்: கொய்யாப்பழம், அன்னாசிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி அதில் பன்னீர் திராட்சை மற்றும் மாதுளம் முத்துக்களை சேர்த்து அப்படியே சாப்பிடியே சாப்பிடலாம்.
ரத்த விருத்திக்கான காய்கறி சாலட்: கேரட், பீட்ரூட் காய்களை துண்டுகளாக்கி, சீரகத்தூள், உப்பு கலந்து கொத்தமல்லி, கறிவேப்பிலையை மேலே தூவினால் காய்கறி சாலட் ரெடி.
கொத்தமல்லி ஜூஸ்: ஒரு கைப்பிடி கொத்தமல்லியை அரைத்து வடிகட்டிய சாறுடன், ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறு கலந்து 100 கிராம் வெல்லம் சுவைக்கு சேர்த்தால் ரத்த அழுத்தத்தை சீராக்கி, பசியை தூண்டும் ஆற்றல் கொண்டது.
வாழைப்பூ சூப்: வாழைப்பூவை சிறு துண்டுகளாக்கி, நான்கு பல் பூண்டு மற்றும் சிறிய வெங்காயம் ஒரு தக்காளி இவற்றை நசுக்கி, சிறிது மிளகு, சீரகம், உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, சுவைக்கு வெள்ளம் சேர்க்கலாம். சுவையான வாழைப்பூ சூப் தயார்.
புதினா ஜூஸ்: புதினா இலைகளை மிக்ஸியில் அரைத்து வடிகட்டிய சாறுடன், எலுமிச்சை பழ சாறு பிழிந்து, சுவைக்கு வெல்லம் சேர்த்து, அரை லிட்டர் தண்ணீர் கலந்து கொடுக்கலாம். இது வளரிளம் பெண்களின் மாதப்போக்கினைச் சீராக்கும். பசியைத் தூண்டி சுறுசுறுப்பைத் தரும்.

இன்றைய மருத்துவக் குறிப்புகள்

இன்றைய மருத்துவக் குறிப்புகள்.....

* இரத்தம் விருத்தி ஆக நாவல்பழல் தினமும் சாப்பிடலாம்.
* தேவையில்லாத கெட்ட நீர் சிறுநீர் வழியாக வெளியேற தினமும் பப்பாளிக்காயைச் சாப்பிட்டு வரலாம்.
* விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வர பித்தத்தை குறைக்கம்.
* காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தேய்ச்து வர முடி நன்றாக வளரும்.
* வேப்பிலை, வெந்தயம், நாவல்பொடி, அதிமதுரம், மாதுளம்பழம், வாழைத்தண்டு சேர்த்து சாப்பிட்டால் புற்றுநோய் குணமாகும்.

இரத்தத்தை த் தூய்மை ஆக்கும் இலந்தை.....

இரத்தத்தை த் தூய்மை ஆக்கும் இலந்தை.....


பொதுவாகவே ஒவ்வொரு பழங்களிலும் ஒவ்வொரு சத்துக்கள் அடக்கியுள்ளன. குறிப்பாக நார்ச்சத்து, புரதச்சத்து, வைட்டமீன்கள் அடங்கியிருப்பதால் அவை எளிதில் ஜீரனமாகி, இரத்தில் கலக்கிறது.
அந்த வகையில் இலந்தை பழத்தில் மருத்துவ குணங்கள் அதிகம் அடங்கியுள்ளன. ஆனால் நகர் புரங்களில் இலந்தை அவ்வளவாக இல்லை என்று தான் சொல்லலாம். எங்கோ ஒரு மூளையில் தான் இலந்தை விற்கப்படுகிறது.
ஆனால் கிராமங்களில் இன்றும் சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பி உன்னும் பழமாக தான் இலந்தை உள்ளது. இப்பழம் ஏழைகளின் பழம் என்றும் அழைக்கப்படுகிறது.
இலந்தையில் இரண்டு வகை உண்டு, ஒன்று நாட்டு இலந்தை, காட்டு இலந்தை. இந்தப் பழத்தில் சிலவற்றில் இனிப்புச் சுவையும், சிலவற்றில் புளிப்புச் சுவையும் இருக்கும். இலந்தையில் வைட்டமீன் ஏ, பி, சி என்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. சுண்ணாம்புச் சத்தும், இரும்பு சத்தும் அதிகம் உள்ளது.
இலந்தை கிடைக்கும் சிசன்களின் இதை எடுத்து கொள்ளலாம். எலும்புகள் உறுதி பெறுவதோடு, பற்களும் உறுதி பெறும். வாந்தி, மயக்கம், தலைசுற்றல் என பல நோய்களுக்கு மருந்தாக இலந்தை பயன்படுகிறது. மாரடைப்பு உள்ளவர்கள் இப்பழத்தை எடுத்துக் கொள்ளலாம்.
சிலர் எதை சாப்பிட்டாலும் செரிக்காமல் அவதிப்படுவர். இவர்கள் இலந்தையுடன் உப்பு சேர்த்து சாப்பிட்டு வர வயிறு இலகுவாகி செரிமான பிரச்னையிலிருந்து விடுபடலாம். பெண்களுக்கு மாதவிடைக் காலங்களில் வரும் வயிற்றுப் போக்கை தடுக்கவும் இந்தப்  பழம் பயன்படுகிறது. கல்வி பயிலும் மாணவர்களுக்கு நினைவாற்றலை அதிகரிக்கக்கூடிய சக்தியும் இலந்தைக்கு உண்டு.

Friday, June 7, 2013

காய்கறிகளிலேயே இருக்கின்றன மருத்துவக் குணங்கள்

காய்கறிகளிலேயே இருக்கின்றன மருத்துவ க் குணங்கள்


நாம் சாப்பிடும் பல காய்கறிகளிலேயே ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. அவற்றை அறிந்து, உகந்த படி சாப்பிட்டால் நலமாக வாழலாம்.
முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டால் மலக்குடலில் சேரும் கிருமிகள் வெளியேறும்.
பீன்ஸ், அவரைக்காய், கீரைகள் உண்பதால் மலச்சிக்கல் வராது.
நார்த்தங்காய் பித்தத்தைத் தணிக்கும்.
மாங்காய் சாப்பிட்டால் தாது பலம் பெறும். மலக்குடல் சுத்தமாகும். பசி அதிகரிக்கும்.
பிடிக்கருணைக் கிழங்கு, புடலங்காய் உண்பதால் மூலத்தை அகற்றலாம்.
அவரைக்காயில் புரதம்,  இரும்பு, சுண்ணாம்புச் சத்துக்கள் இருப்பதால் நீரிழிவு, செரிமாணத் தொல்லை, மலச்சிக்கல் இருப்பவர்கள் அதிகம் சாப்பிடலாம். இரவில் சாப்பிட வேண்டாம்.
மூல நோய் வராமல் தடுக்கும் ஆற்றல் அத்திக்காயில் உள்ளது.
பூசணி, முள்ளங்கியில் நீர்ச்சத்து நிறைந்திருப்பதால் நீர் பிரிந்து பசியைத் தூண்டும்.
கோவைக்காயை சாப்பிட்டால் வாய்ப்புண், வயிற்றுப் புண், நாக்குக் கொப்புளம் சரியாகும்.
அதேப்போல, முட்டைக்கோஸ், அகத்திக்கீரை வாய்ப்புண், குடல் புண்களை ஆற்றும்.
வாழைத்தண்டு சிறுநீர்ப் பாதையில் இருக்கும் கல்லைக் கரைக்கும்.
வெந்தயக் கீரை எலும்பு தேய்மானத்தைத் தடுக்கும்.
சிறிய வெங்காயம் உடல் சூட்டைத் தணிக்கும்.
சுண்டைக்காயை குழந்தைகளுக்குக் கொடுத்தால் வயிற்றில் பூச்சி சேராது. மூச்சுத் திணறல் குறையும்.
காரட் சாப்பிட்டு வந்தால், உடல் பருமனாமல் காக்கும். கண் பார்வைக்கு உகந்தது.
பீன்ஸ் சாப்பிட்டார் பார்வை தெளிவு கிடைக்கும். சருமம் நன்றாக இருக்கும். பித்தம் குறையும்.
காலிஃபிளவர் புற்றுநோயாளிகளுக்கு ஏற்ற உணவாகும். எதிர்ப்புச் சக்தியை அளித்து புற்றுநோய் வளர்ச்சியை குறைக்கும்.

தலைவலியைக் குறைக்கும் முனை அழுத்தம் (அக்குபிரசர்)

தலைவலியைக் குறைக்கும்  முனை அழுத்தம் (அக்குபிரசர்)



தலைவலிக்கு நெற்றியில் தைலம் தடவிக்கொண்டு சூடு பறக்கத் தேய்த்தால் தலைவலி போய்விட்டதைப் போல் தோன்றும். ஆனால் போகாது. இதற்குப் பதிலாக வலது கையின் கட்டைவிரலை மேலிருந்து கீழாக பிடித்தபடி 14 முறை அழுத்தியும் பக்கவாட்டில் 14 முறை அழுத்தியும் விட்டால் படிப்படியாக தலைவலி குறையும்.
இந்த அழுத்தத்துக்குப் பெயர் அக்குபிரஷர், இந்த வகையான அழுத்தங்களை நமது கைகளிலும் கால்களிலும் உண்டாக்குவதின் மூலம் நாள்பட்ட ஆஸ்துமா, சர்க்கரை நோய், எலும்பு சம்பந்தமான பிரச்னைகள், கல்லீரல் தொடர்பான பிரச்னைகள் அனைத்திற்கும் மருந்தில்லா வைத்தியமாகும். பக்க விளைவுகள் இல்லாத வைத்திய முறையாகும். இந்த அக்குபிரஷரை தலைவலி ஏற்படும் போது செய்து பாருங்கள் நல்ல பலன் கிடைப்பதை உணர்வீர்கள்.

செவ்வாழை சாப்பிடத் தொற்று நெருங்காதாம்

செவ்வாழை சாப்பிடத் தொற்று நெருங்காதாம்

* விஷகடிக்கு வெற்றிலையும், மிளகும் சேர்த்து அரைத்து 2 கிராம் உட்கொள்ள விஷத்தன்மை மாறும்.
* தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வர தொற்று நோய் நம்மை அணுகாது.
* அகத்தி இலை அவித்த தண்ணீர் பருகினால் வாய்ப்புண் ஆறும்.
* இரத்தம் உறைதல் குணமாக நெல்லிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
* பீர்க்கங்காய் வேர் கஷாயம் சாப்பிட்டு வர மூளை பலம் பெறும்.