Thursday, June 4, 2026

வெருளி நோய்கள் 1521-1525 : இலக்குவனார் திருவள்ளுவன்



(வெருளி நோய்கள் 1516-1520 : தொடர்ச்சி)

ஒட்டகச்சிவிங்கி போன்ற நீளமான கழுத்துகுறித்த அளவுகடந்த பேரச்சம் நெடுங்கழுத்து வெருளி.
ஒட்டகச்சிவிங்கி வெருளி(Kamilopardaliphobia)எனவும் தனியாக உள்ளது.பிறர் கேலியாக எண்ணுவார்கள் என்று அஞ்சியும் நடமாட்டத்தில் குறைபாடு நேர்வது கருதியும் நீளமான கழுத்துகுறித்த பேரச்சம் கொள்கின்றனர்.
00

நெடுங்கைக் குரங்கு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நெடுங்கைக் குரங்கு வெருளி.
இது, கிழக்கிந்தியத் தீவுகளிலுள்ள நீண்ட கைகளுள்ள வாலில்லாக் குரங்குவகையைச் சேர்ந்தது.
00

நெடுஞ்சாலைகள்(highways and expressways) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நெடுஞ்சாலை வெருளி.
நெடுஞ்சாலைகளில் ஊர்திகள் மிகு விரைவாகச் செல்வதால் நேர்ச்சி(விபத்து) ஏற்படும், உடலுக்கோ உயிருக்கோ ஊறு நேரும் என்று பேரச்சம் கொள்வதால் நெடுஞ்சாலை வெருளி வருகிறது.
Autokinetic என்றால் தன்னோட்டம், தன்னியக்கம், இயந்திர அசைவு எனப்பொருள்கள்.
சாலையைக் கடப்பதில் ஏற்படும்கடப்பு வெருளி (Agyrophobia/banmaxianphobia/DromoPhobia) உள்ளவர்களுக்கு இவ்வெருளி வரும் வாய்ப்பு மிகுதியாக உள்ளது.
ஊர்திகளை மிகு வேகமாக ஓட்டுவதால் வரும் கடுகதி வெருளி(tachophobia) உள்ளவர்களுக்கு நெடுஞ்சாலை வெருளி(Autokinetodromophobia) வரும் வாய்ப்பு உள்ளது.
00

நீளமான சொற்களைக் கண்டு தேவையற்ற பேரச்சம் கொள்வது நெடுஞ்சொல் வெருளி.
நெடுஞ்சொல்லைக் கொண்டே நெடுஞ்சொல் வெருளி குறிக்கப் பெறுவது இதன் சிறப்பாகும்.
முன்னர்க் குறிப்பிட்டதுபோல் 7 எழுத்துகளுக்கு மேல் தமிழில் சொல் கிடையாது. பொதுவான சொற்கள் 3 இலிருந்து 5 இற்குள் அடங்கி விடுகின்றன. என்றாலும் தமிழ் மக்கள் ஆங்கிலம் பயன்படுத்துவதால் ஆங்கிலத்தில் அல்லது தாங்கள் படிக்கும் பிற மொழிகளில் உள்ள நீண்ட சொற்களுக்கு அஞ்சுவர்.
hippopotamus என்பது பேருருவான நீர் யானையைக் குறிக்கிறது. monstro என்றால் கோரப் பேருரு எனப்பொருள். Hippopotomonstrosesquippedalio என்பது நீளமான சொற்களில் ஒன்று. இதைக் கொண்டே நீளமான சொற்கள் வெருளியைக் குறிக்கின்றனர்.
Sesqui pedalis என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் காலடியும் பாதியும் கொண்ட நீளம்; pedal என்பதன் மூலமான pedis என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் காலடி; -alis என்பது பெயரடை ஒட்டு
கி.மு.19 ஆம் ஆண்டைச் சேர்ந்த இலத்தீன் புலவர் ஒராசு(Horace) தன் பாடல் செய்யுட் கலை (Ars Poetica) வரி 97 இல், மிகைநீளச் சொற்களைக் கையாளும் புலவர்களைப்பற்றி “sesquipedalia verba” எனக் கையாண்டிருப்பார். பின்னர் இதுவே மிகைநீளச்சொற்களைக் குறிக்கும் வழக்கமாயிற்று.
sesqui என்னும் இலத்தீன் சொல்லிற்கு ஒன்றரை அடி நீளம், pedalis என்னும் இலத்தீன் சொல்லிற்குக் காலடி என்னும் பொருள். இரண்டையும் இணைத்து நீளமான சொற்களைக் குறிக்கப் பயன்படுத்துகின்றனர். ஆக hippopotomonstrosesquipedalian என்பது பேரச்சம் தரும் நெடுஞ்சொல் என்ற பொருளில் கையாளப்படுகின்றது.
00

நெடுமுகக் குரங்கு(Lemur)பற்றிய அளவுகடந்த பேரச்சம் நெடுமுகக் குரங்கு வெருளி > நெடுமுகி வெருளி.
நெடுமுகியை நேரில் காணா விட்டாலும் படக்காட்சியாகப் பார்த்தாலும் படமாக அல்லது ஓவியமாகப் பார்த்தாலும் அதைப்பற்றிப் படித்தாலும் பகுத்தறிவிற்குப் பொருந்தாமல் நெடுமுகி மேலே பாயும், பிறாண்டும் கடித்துக் குதறும் எனப் பலவாறாகப் பேரச்சம் கொள்கின்றனர்.
விலங்கு வெருளி உள்ளவர்களுக்கு நெடுமுகி வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.

00

Wednesday, June 3, 2026

வெருளி நோய்கள் 1516-1520 : இலக்குவனார் திருவள்ளுவன்

      04 June 2026      



(வெருளி நோய்கள் 1511-1515 : தொடர்ச்சி)

நூறு கோடி / நிகற்புத எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நூறு கோடி எண் வெருளி
நிகற்புதம் என்பது 1,00,00,00,000 ஐக் குறிக்கும்.
00

நெகிழ் நுரை குவளை(Styrofoam cup) குறித்த வரம்பற்ற பேரச்சம் நெகிழ் நுரை குவளை வெருளி.
நெகிழ் நுரை குவளை என்பது எடை குறைந்த, ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கொள்கலன் ஆகும். இது சூடாகவும் குளிராகவும் உள்ள பானங்களுக்குப் பரவலாகப் பயன்படுத்தப்படும். சிறந்த வெப்பக் காப்புத்தன்மையை வழங்கி, பானங்களை அவற்றின் சரியான வெப்பநிலையில் வைத்திருப்பதோடு, பயன்படுத்துபவரின் கைகளை மிகுந்த வெப்பம் அல்லது குளிரிலிருந்து பாதுகாக்கிறது. எனினும் சூடான பானத்தைப் பயன்படுத்தும் பொழுது வேதியல் மாற்றங்களால் உடலுக்குத் தீங்கு நேரும் எனத் தேவையற்ற பேரச்சத்திற்கு ஆளாகின்றனர்.

00

நெகிழிப் பை (plastic bag) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நெகிழிப் பை வெருளி.
செக்கு(Czech) மொழிச்சொல்லான plasty என்பதன் பொருள் நெகிழி.
தாள் பை வெருளி(P🎈gronphobia), பை வெருளி(Sakoulaphobia / Bolsaphobia) காண்க.
00

நெஞ்சு அல்லது நெஞ்சு நோய்(இதய நோய் ) தொடர்பான இயல்பு மீறிய பேரச்சம் நெஞ்சுநோய் வெருளி.
தலைவன் உடன் இல்லாமையால் நெஞ்சு நோவது குறித்துத் தலைவி,
“நோம் என் நெஞ்சே நோம் என் நெஞ்சே” (அகநானூறு 4.1.) என்று கூறுவதாகப் புலவர் காமம்சேர்குளத்தார் கூறுகிறார்.
“ வருந்தியென்
நெஞ்சுபுண் ணுற்ற விழுமத் தானே.” (அகநானூறு 261.7-8)
என்று புலவர் கழார்க் கீரனெயிற்றியார், வருந்தி நெஞ்சம் புண்பட்டதை (அதனால் உறக்கம் வராததைத்)தலைவி தோழியிடம் கூறுகிறாள் என்கிறார்.
இவ்வாறு நெஞ்சு சார்ந்த வலிகளைச் சங்க இலக்கியங்களில் காணலாம். இதுவே அளவு கடந்த பேரச்சமாக மாறும் பொழுது நெஞ்சு வெருளியாகிறது.
cardio என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் நெஞ்சு அல்லது நெஞ்சு சார்ந்த
00

நெடுங்கழுத்தி(அயல் வான் கோழி/Emu) மீதான அளவுகடந்த பேரச்சம் நெடுங்கழுத்தி வெருளி.
நெடுங்கழுத்தி என்பது நீண்ட கழுத்தும் சாம்பல் அல்லது பழுப்பு நிறம் கொண்ட இறகுகளும் விரைவாக ஓடுவதற்கேற்ற நீளக்கால்களும் கொண்ட பறக்க முடியாத ஆத்திரேலியா நாட்டுப் பறவை.
பறவையினங்களில் தீக்கோழிக்கு அடுத்ததாகப் பெரிய பறக்காத பறவை நெடுங்கழுத்தி /அயல்வான் கோழி (Emu).
இதனை ஈமு என்றும் ஈமியூ என்றும் நேர் ஒலிப்பாகச் சொல்கின்றனர்.
00

Tuesday, June 2, 2026

வெருளி நோய்கள் 1511-1515 : இலக்குவனார் திருவள்ளுவன்



(வெருளி நோய்கள் 1506-1510 : தொடர்ச்சி)

கூரிய முனை உள்ளபொருள்கள் மீதான தேவையற்ற அளவுகடந்த பேரச்சம் நுனை வெருளி.
“முல்லை வைந் நுனை தோன்ற இல்லமொடு” எனப் புலவர் குறுங்குடி மருதனார் (அகநானூறு:4:1) முல்லைஅரும்பின் கூரிய முனையை நுனை என்கிறார். 2.
கூற்றம் அஞ்சும் கொல்நுனை எஃகின் இளையானும் (சீவக சிந்தாமணி 1.361)எனத் திருத்தக்க தேவர், கூற்றுவனும் நடுங்கும் கொல்லும் முனையுடைய வேல் ஏந்திய இளைஞன் கந்துக் கடன் எனச் சொல்லும் பொழுது வேல் முனையை நுனை என்கிறார். .
“வில் பழுத்து உமிழ்ந்த வெய்ய வெந் நுனைப் பகழி மைந்தர்” (சீவக சிந்தாமணி:2:27).
வேடர்கள் வில் குழைத்துச் சிந்தின விருப்பமுடைய அம்புகளின் கொடிய முனையைக் குறிக்குமிடத்து நுனை எனப் பயன்படுத்தி உள்ளார்.
இவ்வாறு இலக்கியச் சான்றுகள் பல உள்ளன. எனவே கூரிய பொருள்கள் மீதான அச்சத்தைக் குறிக்கையில் நுனை என்னும் சொல்லைப்பயன்படுத்தி நுனை வெருளி எனலாம்.
belளnē, என்னும் பழங்கிரேக்கச்சொல்லின் பொருள் ஊசி. இங்கே கூர் முனை.
00

நூலகம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நூலக வெருளி.
ஆராய்ச்சித்திறமை குறைவாக இருப்பவர்களும் அதனை மறைக்க வேண்டும் என்க் கருதுபவர்களும் நூலகப் பதற்றத்திற்கு ஆளாகி நூலக வெருளிக்கு ஆளாகிறார்கள். நூலகர் மீது அச்சமும் வெறுப்பும் உள்ளவர்களுக்கும் நூலகத்தின் மீது தேவையற்ற பேரச்சம் வருகிறது.
நூல் வெருளி(bibliophobia) உள்ளவர்களுக்கு நூலக வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
00

புத்தகத்தின் மீது தேவையின்றி வரும் அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் நூல் வெருளி எனப்படும்.
கம்பரின் இராமாயணப் பாடல்கள் சிறப்பாக இருப்பதை அறிந்து தாம் பாடிய இராமாயணப்பாடல் சுவடிளை ஒட்டக்கூத்தர் அழித்தாரல்லவா? இதனைப் புத்தக வெருளியில் சேர்க்கலாமா?
biblion என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் புத்தகம்
biblia என்னும் இடைக்கால இலத்தீன் சொல்லின் பொருள் புத்தகம்
00

புத்தகத்தைத் திரைப்படமாகப் பார்ப்பது குறித்த வரம்புகடந்த பேரச்சம் நூல் காணுரை வெருளி – Visulibo phobia
படவடிவில் காட்சியாக நூல்களைப் படிப்பதால் முதலில் நூல்பட (video book)வெருளி எனக் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் படம் – ஓவியம் எனத் தவறாகப் பொருள்கொள்ள நேரிடும் என்பதால் என இப்பொழுது காணுரை வெருளி எனக் குறித்துள்ளேன்.
00

நூறாயிர எண்/100,000 குறித்த வரம்பற்ற பேரச்சம் நூறாயிர எண் வெருளி.
இலட்சம் என்னும் சொல் பழக்கத்திற்கு வந்து விட்டாலும் நூறாயிரம் என்பதே சரி.
00

Monday, June 1, 2026

வெருளி நோய்கள் 1506-1510 : இலக்குவனார் திருவள்ளுவன்



(வெருளி நோய்கள் 1501-1505 : தொடர்ச்சி)

நீளமான புதுச்சொல் குறித்து ஏற்படும் தேவையற்ற வரம்பு கடந்த பேரச்சம் நீள் புதுச்சொல் வெருளி.
நீளமான சொற்களைப் பயன்படுத்த இயலாமை, அதனைச் சொல்வதற்கு வராமை போன்றவற்றால் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு அந்தச் சொல் மீது வெறுப்பு வருவதும் உண்டு. பழக்கமில்லா நீளச் சொல்லைத் தவறாகச் சொல்லி விட்டால் பிறரின் ஏளனத்திற்கு ஆளாக நேரும் என அஞ்சுவோரும் உண்டு.
இதுவும் நீள்சொல் வெருளியைப்போன்றதுதான். ஆனால் நீளமான நன்கு அறிமுகமான சொல் கண்டு பயப்படாமல் புதிய நீளமான சொற்களைக் கண்டு பேரச்சம் கொள்வோரை இது குறிக்கிறது.
தமிழில் 7 எழுத்துகளுக்கு மேல் சொல் கிடையாது. பொதுவான சொற்கள் 3 இலிருந்து 5 இற்குள் அடங்கி விடுகின்றன. என்றாலும் தமிழ் மக்கள் ஆங்கிலம் பயன்படுத்துவதால் ஆங்கிலத்தில் அல்லது தாங்கள் படிக்கும் பிற மொழிகளில் உள்ள நீண்ட சொற்களுக்கு அஞ்சுவர்.
சிலருக்கு அயலவர் வெருளி இருக்கும். அயல்நாட்டுப் பொருள்களை வெறுக்கும் அவர்கள் அயல்மொழிகளையும் வெறுப்பர்.
00

நுண்ணலை அடுப்புபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் நுண்ணலை அடுப்பு வெருளி.
microwave oven என்பதன் சுருக்கமே Microvo.
நுண்ணலை அடுப்புகள் வசதியானவை என்றாலும், அவற்றில் பல குறைபாடுகளும் உள்ளன. வரையறுக்கப்பட்ட சமையல் முறைகள், உணவைப் பொன்னிறமாகவோ மொறுமொறுப்பாகவோ மாற்ற இயலாமை, சீரற்ற வெப்பமூட்டல் காரணமாக நோய்மி(bacteria) வளரக்கூடிய ‘குளிர்ப் பகுதிகளை’ உருவாக்குதல், நுண்ணலை அடுப்பில பயன்படுத்தத் தகுதியற்ற நெகிழிப்பொருள்களில்(plastocs) உணவைச் சூடாக்கும்போது தீங்கு விளைவிக்கும் வேதியற்பொருள்கள் கசிவதற்கான சாத்தியம் ஆகியவை அவற்றில் அடங்கும். இவை காரணமாக தீங்கு விளையும் என்ற அச்சத்தல் நுண்ணலை அடுப்பைப் பயன்படுத்துவோருக்கு வெருளி வருகிறது.
கதிர்வீச்சு கண்டு அஞ்சுபவர்களுக்கும் நுண்ணலை அடுப்பு வெரளி வருகிறது.
00

நுண்ணோக்கி குறித்த வரம்பற்ற பேரச்சம் நுண்ணோக்கி வெருளி.
நுண்ணோக்கி மூலம் நோய்மிகளைப் பார்ப்பதால் நோய்மிகள் மீது அச்சம் உள்ளவர்களுக்கு நுண்ணோக்கி மீதும் பேரச்சம் வருகிறது. நுண்ணோக்கியைப் பயன்படுத்துவதால் தொற்றுநோய் வருமோ என்று அஞ்சுவர்.அறியப்படாதவற்றை அறிய நேர்ந்தால் சிலருக்கு அச்சம் ஏற்படும். நுண்ணோக்கி மூலம் வெறும் கண்ணால் பார்க்க இயலாதவற்றை அல்லது அவற்றின் பேரளவைப் பார்க்க நேருவதால் தேவையற்ற பேரச்சம் ஏற்படுகிறது. இவை காரணமாக நுண்ணோக்கி வெருளிக்கு ஆளாகின்றனர்.
00

மருந்தூசி போடுவதற்கான காரணமற்ற மிகையான பேரச்சம் மருந்தூசி வெருளி.
நுதி என்றால் கூர்மை, முனை, நுனி எனவும் பொருள்கள் உள்ளன.கூர்மையான ஊசியின் முனை நுனியைக் குறிக்கும் வகையில் சுருக்கமான இச்சொல் கையாளப்பட்டுள்ளது. மருந்தூசி என்பது இரண்டு சொற்களின் சேர்க்கையாக உள்ளமையால் தொடக்கத்தில் புரிவதற்காகப் பயன்படுத்தி விட்டு நாளடைவில் நுதியை மட்டும் பயன்படுத்தலாம்.
கூர் வெருளி(Aichmophobia), நுனை வெருளி(Belonephobia) ஆகியவற்றுடன் ஒப்புமை உள்ளது.
trypள என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் துளையிடு. (மருந்தூசி உடலில் துளையிட்டுத்தானே மருந்தைச் செலுத்துகிறது.)
00

நுரையீரல் அல்லது நுரையீரல் நோய் தொடர்பான வரம்பற்ற பேரச்சம் நுரையீரல் வெருளி.
இருமல் ஏற்பட்டாலோ சளி வந்தாலோ அதனால் நுரையீரல் நோய்வரும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழக்கும் நிலை வரலாம் எனக் காரணமின்றிப் பேரச்சம் கொள்கின்றனர்.
00

Sunday, May 31, 2026

வெருளி நோய்கள் 1501-1505 : இலக்குவனார் திருவள்ளுவன்



(வெருளி நோய்கள் 1496-1500 : தொடர்ச்சி)

பாடும் பறவை என்று சொல்லப்படும் நீலப்பறவை(Bluebird) மீதான அளவுகடந்த பேரச்சம் நீலப்பறவை வெருளி.
பாடும் பறவை தீங்கற்றவை. அதனைக் கூண்டில் அடைத்தாலும் பாடும். இதனை மகிழ்ச்சியின் வெளிப்பாடாகக் கருதக்கூடாது. விடுதலை பறிக்கப்பட்டதன் வலியாகக் கருத வேண்டும் என்பர்.எனவே, நீலப்பறவை வெருளி என்பது நீலப்பறவையின் நிலைமை கண்டு கவலையும் அச்சமும் கொள்வது என்பர் சிலர்.
பறவை வெருளியின் வகையைச் சேர்ந்தது. எனவே, பறவை வெருளி உள்ளவர்களுக்கு நீலப்பறவை வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
சிலர் இதனை பிலெபிலியா – Blephilia வெருளி என்பர். இது நீல வண்ணப் பூவைக் குறிக்கும். நீலப்பறவையைக் குறிக்காது.
00

  1. நீலவண்ண வெருளி-Cyanophobia/Naftikoblephobia

நீல நிறம் தொடர்பான தேவையற்ற மிகையான பேரச்சம் நீலவண்ணவெருளி.
நீல நிறம், நீல நிற ஆடைகள், நீல நிறப்பொருள்கள், தொடரபான படங்கள் , படக்காட்சிகள் மீது வரும் பேரச்சமே இது.
kyanos என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் அடர் நீலம்.
naftikள ble என்றால் கிரேக்கத்தில் நாவாய் நீலம் எனப்பொருள்.
00

  1. நீளுருளைப் பொரியல் வெருளி – Tiganitepatatephobia

நீளுருளைப் பொரியல் மீதான அளவுகடந்த பேரச்சம் நீளுருளைப் பொரியல் வெருளி.
நீளுருளைப் பொரியல் = பிரெஞ்சுப் பொரியல் (French fries)என்றும் விரலளவுப் பொரியல் (finger chips) என்றும் அழைக்கப்பெறும் நீளத் துண்டு உருளைக்கிழங்குப் பொரியல்.
இதனைச் சுருக்கமாக நீளி எனலாமா? நீண்டவை பல இருப்பினும் நீள் உருளைப் பொரியல் என்னும் பொருளில் பயன்படுத்தினால் நிலைக்குமல்லவா?
00

  1. நீள்முகி வெருளி -Dobermanphobia நீள்முகநாய் வெருளி (Doberman) பற்றிய அளவுகடந்த பேரச்சம் நீள்முகி வெருளி.
    நெடுமுகக் குரங்கை நெடுமுகி எனச் சுருக்கிக் குறிப்பிடுவதுபோல், நீள்முக நாயை நீள்முகி எனச் சுருக்கமாகக் கூறலாம்.
    00

நீள் தாழ்வாரம்(long hallway) பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் நீள் தாழ்வார வெருளி.
00

Saturday, May 30, 2026

வெருளி நோய்கள் 1496-1500 : இலக்குவனார் திருவள்ளுவன்

 




(வெருளி நோய்கள் 1491-1495 தொடர்ச்சி)

நீர், நீர்ம வகைகள், நீர்ப்பதம், நீர்க்கசிவு முதலானவற்றின் மீது ஏற்படும் அளவு கடந்த பேரச்சம் நீர்ப்பத வெருளி.
தூய்மையற்ற தண்ணீர் தொடர்பான மாசுநீர் வெருளி(Turistaphobia) எனத் தனியாகக் குறிக்கப் பெறுகிறது. நீர்ப்பத வெருளியில் இணைத்துக் குறித்துள்ளேன்.
தண்ணீர் மீது மட்டுமல்லாமல் மது முதலான நீர்ம வகைகளின் மீதும் ஏற்படும் மிகைப் பேரச்சம்.
தூய்மையற்ற நீரினால் நலக்குறைவு ஏற்படும், உடல் நலம் கெடும், இவற்றால் வேலைகள் பாதிக்கும் என்பன போன்றவற்றில் வரும் பேரச்சங்கள் இதில் அடங்கும்.
hygro என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் ஈரப்பதம்.
[விக்கி வெருளியில் Ygrophobia(the fear of liquid) என உள்ளது. இதனைத் தனிப் பிரிவாக எண்ணி நானும் தனியாகக் குறித்திருந்தேன். ஆனால், Hygrophobia(the fear of liquids) என்பதில் முதல் எழுத்து எச்(H) விடுபட்டுப் பிழை நேர்ந்திருக்கும் என எண்ணுகிறேன். எனவே, அதனை நீக்கி விட்டேன்.]
00

நீர் யானை குறித்த வரம்பற்ற பேரச்சம் நீர் யானை வெருளி.

நீர் யானைகள் (Hippopotamus) இயற்கையிலேயே மிகவும் உக்கிரமமான, வலிமை வாய்ந்த விலங்குகள். தங்கள் எல்லை குறித்த விழிப்புணர்வு மிக்கவை. எனவே, தங்களின் குட்டிகள் அருகே அல்லது எல்லைக்குள் பிற உயிரினங்கள் வந்தால் கடுமையாகத் தாக்குகின்றன. எனவே, இயல்பாகவே அவற்றின் மீதான அச்சம் உலகளவில் நிலவுகிறது. ஏறத்தாழ 1500-3200 அயிரைக்கா (கிலோ) எடை கொண்டவை. அவற்றின் வாய் மிக அகலமாக திறக்கக்கூடியது. அதில் ஏறத்தாழ 50 சிறுகோல்(செ.மீ.) நீளம் வரை வளரக்கூடிய நீண்ட கோரைப்பற்களைக் கொண்டுள்ளன. நிலத்திலும் மணிக்கு 30 அயிரைக்கா(கி.மீ.) வேகத்திற்கும் அதிகமாக ஓடுவன.
எனவே பார்ப்பவர்க்கு அச்சம் வருகின்றது. இருப்பினும் சிலர் படத்தில் பார்த்தாலோ தொலைக்காட்சியில் அல்லது திரைக்காட்சியில் பார்த்தாலோ அவை பற்றிய செய்திகளைக் கேட்டாலோ பகுத்தறிவிற்குப்பொருந்தாத பேரச்சம் கொள்கின்றனர்.
“hippos” என்னும் கிரக்கச் சொல்லின் பொருள் குதிரை. எனினும் நீண்ட, பெரிய, வலிய உயிரினங்களையோ சொற்களையோ குறிக்க இச்சொல் பயன்படுகிறது. Hippopotamus என்பது நீர் யானை எனப்படுகிறது.
00

நீர் மூழ்கிக் கப்பல்(submarine) குறித்த அளவு கடந்த பேரச்சம் நீர் மூழ்கி வெருளி.
வெளி உலகம் தெரியாமையால் நீருக்குள் மூழ்கிவிடுவோமோ, திமிங்கிலம் போன்ற வலிமையான நீருயிரிகளால் அழிவு ஏற்படுமோ, போதிய காற்று கிடைக்குமோ என்றெல்லாம் கவலைப்பட்டுப் பேரச்சத்திற்கு ஆளாவோர் உள்ளனர். நீர்மூழ்கிக்கப்பல் நேர்ச்சிகள் குறித்து அறிந்துள்ளவர்களும் அவற்றால் பேரச்சத்திற்கு ஆளாகின்றனர்.
00

  1. நீர் வெருளி – Aquaphobia / Waterphobia

தண்ணீரைக் கண்டு தேவையற்ற அளவு கடந்த பேரச்சம் கொள்வது நீர் வெருளி.
கடல், ஆறு,ஏரி, நீர்நிலைகள், நீருள்ள குளியல் தொட்டி என எதுவாக இருந்தாலும் அதனால் அச்சுறுத்தல் வருவதாகக் கற்பனை செய்து கொண்டு பேரச்சம் கொள்வர்.
சிலருக்குத் தண்ணீரில் கண்டம் இருப்பதாகக் கணியர்(சோதிடர்) கூறியிருந்தால் தண்ணீரைக் கண்டாலே மிகுபேரச்சம் கொள்வர்; நீர்நிலைகளில் மேற்கொள்ளும் படகுப்பயணம், நீச்சல் ஆகியவற்றின் மீதும் பேரச்சம் உண்டாகிறது
புலவர் ஐயூர் முடவனார்
நீர்மிகின் சிறையு மில்லை
என்கிறார். அஃதாவது நீர் மிகுந்தால் அதைத் தடுத்துக் காப்பதற்கான அரண் எதுவுமில்லை என்கிறார். எனவே நீர்ப்பெருக்கு குறித்த பேரச்சம் வருவது இயற்கைதான்.
நாய்க்கடியின் பொழுது வரும் சல வெருளி(Hydrophobia)யிலிருந்து மாறுபட்டது இது.
இலத்தீனிலிருந்து இடைக்கால ஆங்கிலத்திற்கு வந்த சொல்லான Aqua என்பதற்கு நீர் எனப்பொருள்.
00

Friday, May 29, 2026

வெருளி நோய்கள் 1491-1495: இலக்குவனார் திருவள்ளுவன்

      30 May 2026      



(வெருளி நோய்கள் 1486-1490-தொடர்ச்சி)

நீரிழிவு தொடர்பான தேவையற்றஅளவு கடந்த பேரச்சம் நீரிழிவு வெருளி.
போதிய கணைய நீர் சுரக்காமையால் இந்நோய் ஏற்படுகிறது.
நீரிழிவின் பக்க விளைவுகளான அளவுகடந்த பசி, உடல் சோர்வு, உடல் இளைத்தல், தலை சுற்றுதல்,மயக்கம், கை, கால்களில் விரைப்புத் தன்மை, உடலில் பருக்களும், கட்டிகளும் தோன்றல், இனப்பெருக்க உறுப்புகளில் அழற்சி, பார்வைக் குறைவு, புண்கள் ஏற்படின் அவை மெதுவாக ஆறுதல், எளிதில் சினம் அடைதல், மாரடைப்பு, சிறுநீரகக் கோளாறுகள், பக்கவாதம், கால்களை இழத்தல், உயர் இரத்த அழுத்தம், இறப்பு போன்றவை குறித்து அளவு கடந்து அச்சம் கொள்ளுதல்.
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின். (திருக்குறள் 942)

அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கு மாறு. (திருக்குறள் 943)
முதலிய திருவள்ளுவரின் நெறிகளைப்பொதுவாக அனைவரும் குறிப்பாக நீரிழிவு நோயினரும் கடைப்பிடித்தால் இந்நோய்ச் சிக்கலில் இருந்து மீளலாம்.
“யா காவராயினும் நா காக்க” என்பது சொல்லுக்கு மட்டுமல்ல, இங்கே நோய்க்கும் பொருந்துகிறது.
சில நேரங்களில் நீரிழிவு நோய்க்கு ஆளானவர்களை விட அவர்களின் குடும்பத்தினருக்கு நீாிழிவு வெருளி ஏற்படும்.
இந்நோயர்களுக்கு, மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வகத்தினர் உடுத்தும் வெள்ளாடைகளால் வெள்ளாடை வெருளியும் அன்றாடம் அல்லது அடிக்கடி ஊசி போட்டுக்கொள்வ்தால் மருந்தூசி வெருளி(Trypanophobia)யும் ஏற்படுவதுண்டு.
00

நீரூற்று தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நீரூற்று வெருளி.
நீரூற்று காண மகிழ்ச்சியும் அடைவார்கள். அதே நேரம் நீர்த்திவலைகள் உடைகளில் தெறிக்கும் என்றும் மேலே தெறிப்பதால் நலக்குறைவு ஏற்படும் என்றும் பெருங்கவலையும் பேரச்சமும் கொள்வர்.
நீர்வெருளி(aquaphobia), நீர் மூழ்கிப் பொருள் வெருளி(submechanophobia), நீர் மூழ்கி வெருளி(Qonshungphobia) உள்ளவர்களுக்கு நீரூற்று வெருளி வர வாய்ப்புள்ளது.
Syntrivani அல்லது Sintrivani என்பது நீரூற்று என்னும் பொருள் கொண்ட şadırvan என்னும் துருக்கியச் சொல்லில் இருந்து உருவானது.
00

நீரோடை(running water) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நீரோடை வெருளி
நீரில் அடித்துச் செல்லப்படுவோம், நீர்நிலைகளில் உள்ள உயிரிகளால் உயிருக்குப் பேரிடர் ஏற்படும், ஆற்றில் இறங்காமலேயே நீர்ச்சுழியால் இழுக்கப்பட்டு மூழ்கடிக்கப்படுவோம், உயிர் இழக்க நேரும் என்றெல்லாம் தேவையின்றி அச்சம் கொள்வோர் உள்ளனர். இவ்வாறான ஆறு, கால்வாய் முதலான ஓடும் நீர் உள்ள நீர்நிலைகள் குறித்த காரணமற்ற அச்சமே நீரோடை வெருளி.
potamo என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் ஆறு.
00

நீர்ச்சறுக்குமீதான அளவுகடந்த பேரச்சம் நீர்ச்சறுக்கு வெருளி.
சறுக்கி விழுவதால் மயக்கம் வரும், தலைச்சுற்றல் வரும், வாந்தி வரும் என்பனபோன்ற பேரச்சங்களுக்கு ஆளாவர்.
‘Nerolabitur’ என்பது இலத்தீன் மொழிச் சொல்லாகும். இலத்தீன் வினைச்சொல்லான சரிந்து விழுதல் / நழுவுதல் பொருள்கள் கொண்ட labor என்னும் சொல்லில் இருந்து உருவானது. Labitur என்னும் சொல் சரிந்து விழுகிறார் / நழுவுகிறார் ஆகிய பொருள்களில் பயன்படுகிறது. இங்கே உச்சியிலிருந்து நழுவி சரிந்து விழுவதைக் குறிக்கிறது.
உயர வெருளி(hypsiphobia), உயர்பு வெருளி(acrophobia/altophobia) உள்ளவர்களுக்கு நீர்ச்சறுக்கு வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
00

நீர்நாய்(Otter) குறித்து வரும் காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் நீர்நாய் வெருளி.
தொல்லைதரும் விலங்கினங்கள் மீது பொதுவாக வரும் அச்சத்தின் தொடர்ச்சியாக நீர்நாய் மீது, நீர்நாய் பற்றிய சிந்தனையில், அதனால் உயிருக்கு அல்லது உடலுக்கு ஊறுநேரும் எனக் காரணமின்றிப் பேரச்சம் கொள்வர்.
latra என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் நீர்நாய்.
00