Monday, May 13, 2024

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – எ

      14 May 2024      அகரமுதல



(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும்- ஊ – தொடர்ச்சி)

121.       வேளாளரது தோற்றமும் அவர்தம் வரலாறும்   1927

– வல்லை. பாலசுப்பிரமணியன்     

122.       நீதிநெறி விளக்கம் மூலமும் விருத்தியுரையும்  1928

– சோடசாவதானம் தி. சுப்பராய செட்டியார்     

123.       இரா. பழனியாண்டிப் பிள்ளையின் சீவிய சரித்திரம்     1928

  • இரா. பழனியாண்டிப்பிள்ளை  

124.       வேதாந்த பாசுகரன் – கருணையானந்த ஞானபூபதிகள்     1928

125.       திரிவிரிஞ்சை புராணம்  1928

– குறிப்புரை டி. பி. கோதண்டராமரெட்டியார்     

126.       கம்ம சரித்திரச் சுருக்கம் – சு. வேங்கடசாமி நாயுடு. பழநி   1928

127.       திருப்புனவாயிற் புராணம்     1928

– திருவாரூர் தியாகராச கவிராச தேசிகர் 

– அரும்புதவுரை : தூத்துக்குடி பொ. முத்தையா பிள்ளை    

128.       திருவோத்துர் சிரீஇளமுலை அம்பிகை அந்தாதி

– கருந்திட்டைக்குடி வி. சாமிநாதபிள்ளை 

129.       இளைஞர் தமிழ்க் கையகராதி 1928

– மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை

130.       திவ்ய சூரி சரிதம்    1929

– மொழிபெயர்ப்பு உ. வே. திரு. வீ. சாமி ஐயங்கார்    

– தூசி. இராசகோபால பூபதி  

முன்னுரை நா. முனிசாமி முதலியார்    

131.       நளாயினி வெண்பா     1929

– திருப்பத்தூர் கா. அ. சண்முக முதலியார்

132.       சுயமரியாதை கண்டனத் திரட்டு      1929

– கட்டுரையாளர் தி. பொ. மீனாட்சி சுந்தரம்பிள்ளை   

– கட்டுரையாளர் நாரதர்

133.       ஆனந்தபோதினி (தொகுதி 15 – பகுதி 6. பக். 376)      1929

– கட்டுரையாளர் கதாரத்தின சே. கிருட்டிணசாமி சருமா  

134.       புள்ளிருக்கும் வேளூர் தேவாரம்     1929

– பதிப்பித்தவர் ச. சோமசுந்தர தேசிகர்    

135.       சிரீ ஆறுமுகக் கடவுள் வரலாறு      1930

– க. அயோத்திதாச பண்டிதர்

136.       ஏன் புலால் மறுத்தல் வேண்டும்    1930

– பண்டிதர் பாலசுந்தரம் பிள்ளை    

137.       சசிவன்னபோதமூலம்   1930

– காஞ்சிநகர் ஆ. செங்கல்வராய முதலியார்     

138.       மெக்காலே பிரபு – பி.எசு. இராசன் 1930

139.       திருக்குடந்தைப் புரண வசனம்      1932

– புது. இரத்தினசாமி பிள்ளை 

140.       திருவருட்பா மூலமும் உரையும் நெஞ்சறிவுறுத்தல்   1932

– உரை : அரன்வாயல் வேங்கடசுப்பிப் பிள்ளை

(தொடரும்)

Monday, May 6, 2024

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும்- ஊ



(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும்-உ-தொடர்ச்சி)

99. உதயணசரிதம் – பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் 1924
100. பத்மினி – வே. முத்துசாமி ஐயர் 1924
101. (உ)லோகமான்ய பாலகங்காதர திலக் – கிருட்டிணசாமிசருமா 1924
102. பிரமானந்த நான்மணி மாலை – பி.பி. நாராயணசாமி நாயுடு 1924
103. தஞ்சாவூர் சில்லாவின் வரலாறு – ஆர். விசுவநாத ஐயர் 1924
104. சிவனடியார் திருக்கூட்டம் 1925
105. தேசபந்து விசயம் – ம. க. சயராம் நாயுடு 1925
106. ஞானபோதினி அல்லது சிவப்பிரகாசம் 1925
– சோழ, கந்த சச்சிதானந்தனார்
107. தற்காலத் தமிழ்ச் சொல்லகராதி 1925
– திவான்பகதூர் ச. பவானந்தம்பிள்ளை
108. நாகரிகப் போர் (நாவல்) – பாசுகர என். நாராயணய்யா 1925
109. பருத்ருஅரி சிங்கார சதகம் உரை 1925
– விளக்கவுரை : ம. மாணிக்கவாசகம் பிள்ளை
110. நிகழ்காலத் திரங்கல் 1925
111. நமது பரதகண்டம் – வை. சூரிய நாராயண சாத்திரி 1926
112. குலேசன் – கா. நமச்சிவாயமுதலியார் 1926
113. கனம் திவான் பகதூர் எல். டி. சாமிக்கண்ணுபிள்ளை
⁠சீவிய சரித்திரம் – ஆ. சண்முகம்பிள்ளை 1926
114. மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் 1926
– திரு. வி. கல்யாணசுந்தரனார்
115. பாண்டியராச வம்ச சரித்திரம் – ஆர். அரிகரமையர் 1926
116. சீவகாருணிய ஒழுக்கம் – சிதம்பரம் இராமலிங்கசுவாமிகள் 1927
பதிப்பாசிரியர் : மணி. திருநாவுக்கரசு முதலியார்
117. பெருமக்கள் கையறு நிலையும் மன்னைக்காஞ்சியும் 1927
– அ. கி. பரந்தாம முதலியார்
118. ஆசாரக்கோவை பாட்டும் குறிப்பும் 1927
– பதிப்பாசிரியர் : மணி. திருநாவுக்கரசு முதலியார்
119. முருகன் – ஒரு தமிழ்த் தெய்வம்- டி. பக்தவத்சலம், பி.ஏ., 1927
120. திருக்குற்றாலக்குறவஞ்சி 1927
– மதுரை மு. ரா. அருணாசலக் கவிராயர்

(தொடரும்)

Monday, April 29, 2024

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும்-உ

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும்-ஈ-தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் சொல்லாக்கம்
சொற்கள் வழங்கிய
நூல்களும் ஆசிரியர்களும் ஆண்டுடன் 81-100

  1. கலங்காத கண்ட விநாயகர் விண்ணப்பமாலை (1920)
  2. சங்கரதாசு சுவாமிகள் பக்திரசக் கீர்த்தனை – சங்கரதாசு சுவாமிகள் (தூத்துக்குடி) (1920)
  3. பரமானந்த பக்திரசக் கீர்த்தனை – தூத்துக்குடி டி.டி. சங்கரதாசு சுவாமிகள் (1920)
  4. குருகுலம் – திருக்குறள் பீடம், அழகரடிகள் வாழ்க்கை வரலாறு – த. ஆறுமுகம் (1920)
  5. குடியால் கெட்ட குடும்பம் – தமிழ்நாவலர் எசு.கே. கோவிந்தசாமிப் பிள்ளை (1921)
  6. சின்மய தீபிகை – முத்தைய சுவாமிகள், குமார தேவராதீனம் – விருத்தியுரை : காஞ்சி. இராமாநந்த யோகிகள் (1921)
  7. சைவ சித்தாந்த மகா சமாசம் பொன்விழா மலர்
  8. கந்தர் சசுட்டி கவசம் மூலமும் உரையும் – மதுரை – செம்பூர் வித்துவான் வீ. ஆறுமுகஞ்சேர்வை (1923)
  9. சுதானந்தர்(புதினம்),நாகை சொ.தண்டபாணிப்பிள்ளை, (1922)
  10. தமிழ் வியாசங்கள் – வி. கோ. சூரியநாராயண சாத்திரியார் (1922)
  11. சீவகன் சரிதை – ஆ.வீ. கன்னைய நாயுடு (1922)
  12. திருவாதவூரடிகள் புராணம் – பிரசங்கபாநு கா. இராசாராம்பிள்ளை (1923)
    93 அட்டாங்க யோகக்குறள் வருத்தமற வுய்யும் வழி – சேரா. சுப்பிரமணியக் கவிராயர் (1923)
    94 மயிலை சிவ. முத்து நினைவுமலர் (மாணவர்மன்ற வெளியீடு) (1919)
  13. திருக்குறள் வீட்டின்பால் – சே.எம். நல்லசாமிப்பிள்ளை பி.ஏ.,பி.எல். (1923)
  14. பெரிய புராண வாராய்ச்சி – வா. மகாதேவ முதலியார் (1924)
  15. வக்கீல் பண்டாரம்பிள்ளை. சரித்திரச் சுருகம் – மு.பொ. ஈசுரமூர்த்தியா பிள்ளை (1924)
  16. தமிழ்நூற் பெருக்கம் – வை. சூரியநாராயண சாத்திரி (1924)
  17. மருத்துவ… கைப்புத்தகம் (பக்.80) – கோ.கி. மதுசூதன்ராவ் (1924)
  18. தமிழ்க்கல்வி – மணத்தட்டை எசு. துரைசாமி ஐயர் (1924)

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்

Monday, April 22, 2024

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும்-ஈ

      23 April 2024      அகரமுதல



(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும்-இ- தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் சொல்லாக்கம்
சொற்கள் வழங்கிய
நூல்களும் ஆசிரியர்களும் ஆண்டுடன் 61-80

  1. கிறித்துவ ஆலயங்களின். மூன்றாவது ஆண்டறிக்கை(1911-15), பொதுப் பதிப்பாசிரியர் : கொண்டல் சு. மகாதேவன்
  2. வடிவேலர் சதகம் – உடுமலைப்பேட்டை முத்துசாமிக் கவிராயர் (1915)
  3. பிரதாபசந்திர விலாசம் – இராமசாமிராசு, பாரிசுட்டர், பதிப்பாளர் வி. இராமசாமி சாத்திரிலு, (1877, 1915)
  4. நாத. கீத – நாமகள் சிலம்பொலி – சி.வி. சாமிநாதையர் (1916)
  5. சத்திய அரிச்சந்திரப் பா – மதுரை தல்லாகுளம் சி. முத்திருள முதலியார் – – பரிசோதித்தவர் : பிரசங்க வித்துவான் நவநீதகிருட்டிண பாரதியார் (1916)
  6. தவம் – ச. தா. மூர்த்தி முதலியார் (1917)
  7. நாநாசிவ வாதக் கட்டளை – சிரீ சேசாத்திரி சிவனார், குறிப்புரை : கோ. வடிவேலு செட்டியார் (1917)
  8. தாயுமான சுவாமிகள் திருப்பாடற்றிரட்டு
  9. (இ)ரிப்பன் ஐந்தாம் வாசக புத்தகம் – தி. செல்வகேசவராய முதலியார் (1918)
  10. சித்தார்த்தன் – அ மாதவையர் (1918)
  11. மேரு மந்தர புராணம் மூலமும் உரையும் (1918)
  12. சித்தார்த்தன் – அ மாதவையர் (1948)
  13. பிரபஞ்சவிசாரம் – யாழ்ப்பாணம் குகதாசர் – சபாரத்தின முதலியார் (1919)
  14. திருக்கருவைத் தலபுராணம் – எட்டிச்சேரி ச. திருமலைவேற் பிள்ளை (1919)
  15. மேகதூதக் காரிகை மொழிபெயர்ப்பு : சுன்னாகம் அ. குமாரசுவாமிப்பிள்ளை (1919)
  16. பாண்டியதேச நாயக்கமன்னர் வரலாறு – பசுமலை நெ.இரா. சுப்பிரமணிய சருமா (1919)
  17. கலைசைச் சிலேடை வெண்பா மூலமும் உரையும் – உரை : சதாவதானம் தெ. கிருட்டிணசாமிபாவலர் (1920)
  18. பன்னிரண்டு உத்தமிகள் கதை – திவான் பகதூர் வி. கிருட்டிணமாச்சாரியார் (1920)
  19. சிறுமணிச் சுடர் – மதுரை எசு.ஏ. சோமசுந்தரம் (1920)
  20.    சீகாளத்திப் புராணம் மூலமும் உரையும் – உரை : மகாவித்துவான் காஞ்சிபுரம் இராமநந்த யோகிகள் (1920)

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்

Monday, April 15, 2024

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும்-இ

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் ஆ – தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் சொல்லாக்கம்
சொற்கள் வழங்கிய
நூல்களும் ஆசிரியர்களும் ஆண்டுடன் 41-60

  1. சரீர வியவட்சத சாத்திரம் என்னும் 1906
    அங்க விபாக சுகரண வாதம் – டி.ஆர். மகாதேவ பண்டிதர்
  2. சிரீ பாகவத தசமசுகந்த கீர்த்தனை 1907
    • அனந்த பாரதி சுவாமிகள்
  3. வேதாந்த சூளாமணி மூலமும் உரையும் 1908
    • விரிவுரை : பிறைசை அருணாசல சுவாமிகள்
    • குறிப்புரை : கோ. வடிவேலு செட்டியார்
  4. நாட்டுப்பாட்டு (தேசியகீதம்) – – பரலி சு. நெல்லையப்பர் 1908
  5. மார்க்கண்டேய புராணம் வசன கள்வியமும்
    அரும்பத விளக்கமும் – உபகலாநிதி பெரும்புலவர் 1909
    தொழுவூர் வேலாயுத முதலியார்
  6. தருக்க கெளமுதியும் நியாய பதார்த்தம் பதினாறும் 1909
    • தஞ்சை மாநகரம் வெ. குப்புசாமிராசு
  7. மார்க்கண்டேய புராணம்
    வசனகாவியமும் அரும்பத விளக்கமும் 1909
    • தொழுவூர் வேலாயுத முதலியார் (பரிசோதித்தவர் :
      மேற்படியார் மகன் : வே. திருநாகேசுவர முதலியார்)
  8. அமிச சந்தேசம் (சித்திரபானு, பங்குனி)
    • கவித்தலம் துரைசாமி மூப்பனார்
  9. கொக்கோகம் – அதிவீர ராம பாண்டியன் 1910
    உரை கொற்றமங்கலம் இராமசாமிப் பிள்ளை
  10. தருக்ககெளமதி
    தஞ்சை மாநகரம் வெ.குப்புசாமிராசு
  11. வியாசப் பிரகாசிகை 1910
    பதிப்பாளர் : பி.எசு. அப்புசாமி ஐயர்
  12. நளவெண்பா மூலம் அகல 1910
    உரை : தமிழ்வாணர் மதுரகவி ம. மாணிக்கவாசகம்பிள்ளை
  13. இயலிசைப் புலவர் தாரதம்மியம் 1911
    மு. இரா. கந்தசாமிக் கவிராயர்
  14. விவேகானந்த விசயம் – மகேச குமார சர்மா 1912
  15. வியாசங்களும் உபந்நியாசங்களும் 1913
    சின்னையா செட்டியார், மகிபாலன்பட்டி
  16. மொழிநூல் – மாகறல் கார்த்திகேய முதலியார் 1913
  17. விட்ணு தல மஞ்சரி (2 பாகங்கள்) 1908– 1913
    மயிலை, கொ. பட்டாபிராம முதலியார்
  18. முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் 1914
    • உரை : காஞ்சி. மகாவித்துவான் இராமசாமி நாயுடு
  19. சதகத்திரட்டு 1914
  20. சந்தியாவந்தனம் – கோ. வெங்கிடாசல ஆச்சாரியார், திருச்சி 1908

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்

Monday, April 8, 2024

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் ஆ

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – அ தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் சொல்லாக்கம்

சொற்கள் வழங்கிய

நூல்களும் ஆசிரியர்களும் ஆண்டுடன் 21-40

  1. தமிழ் வித்யார்த்தி விளக்கம் (முதற்பாகம்) 1894
    • புத. செய்யப்ப முதலியார் – தமிழ்ப்பண்டிதர்
  2. சிரீ பத்மநாப சுவாமி சந்திரகலாட்சை மாலை 1894
    அபிநவ காளமேகம் அநந்த கிருட்டிணையங்கார்
    (வானமாமலை மடம் ஆசுத்தான வித்துவான்)
  3. மாயாவாத சண்டமாருதம் – ஓர் இந்து 1895 மூன்றாம் நிலை புத்தகம் 1897
  4. பதப்பொருளும் வினா விடையும் – எத்திராச முதலியார்
  5. தமிழ் இலக்கணத் தெளிவு – டேவிட் சோசெப்பு, பி.ஏ.,
    (இராசமுந்திரி கல்லூரி) (நானூறு பக்கங்களுக்கு மேல்)
  6. தனிப்பாசுரத் தொகை – பரிதிமாற்கலைஞன் – 1899
  7. (வித்தியாதீபிகை என்னும்) கல்வி விளக்கம் 1899
    • மொழிபெயர்ப்பாளர்கள் : எசு.வி. கள்ளப்பிரான்பிள்ளை
      சி. அப்பாவு பிள்ளை, வி. பி. சுப்பிரமணிய முதலியார்
  8. சீனம், சீனருடைய சித்திரப்படச் சரிதைகள் 1902
  9. சைவசித்தாந்தப் பிரசங்கக் கோவை –
    சொற்பொழிவாளர் : சோ. வீரப்ப செட்டியார் 1902
  10. சிவசேத்திர யாத்திரானுகூலம் –
    சாலியமங்கலம் மு. சாம்பசிவ நாயனார் 1903
  11. குசேலோபாக்கியாநம் மூலமும் உரையும் 1904
    வித்வான் காஞ்சிபுரம் இராமசாமி நாயுடு
  12. விவேக இரசவீரன் கதை – பாலசுப்பிரமணியபிள்ளை 1904
  13. மகாசன மண்டலி 1904
    • டி. ஏ. சாமிநாத ஐயர் (ஆர்யா பத்திரிகை ஆசிரியர்)
  14. திருக்குறள் மூலமும் பரிமேலழக ருரையும் 1904
    கோ. வடிவேலு செட்டியார், சென்னை (தெ. பொ. மீ. யின் ஆசிரியர்)
    • பெங்களுர் வல்லூர் தேவராசபிள்ளை
  15. அறநெறிச்சாரம் (முனைப்பாடியார்) 1905
    • பதிப்பாசிரியர் தி. செல்வக்கேசவ முதலியார் எம்.ஏ.
  16. திருவிளையாடல் புராண மூலமும் 1905
    • அரும்பதக் குறிப்புரையும்
  17. பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணம் 1905
    • அரும்பதக் குறிப்புரை முத்தமிழ் இரத்தினாகரம்
    • 38.மதி. பானுகவி வல்லி, ப. தெய்வநாயக முதலியார் 1906
    • 39. சேந்தன் செந்தமிழ் – பாம்பன் குமரகுருபர சுவாமிகள்
    • 40. பகவத்கீதை வெண்பா 1906
    • வாதி கேசரி சிரீ அழகிய மணவாளசீயர்
    • பதிப்பாளர் சி.. கே. பாலசுப்பிரமணியம்

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்

Tuesday, April 2, 2024

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 43 : பூங்கொடி தெளிதல்

 




(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 42 : தாமரைக் கண்ணி நிகழ்ந்தன கூறல் -தொடர்ச்சி)

பூங்கொடி

பூங்கொடி தெளிதல்

நல்லியற் பூங்கொடி நலங்குறைந் திருப்போள் 45
சேக்கையிற் சாய்ந்து சிந்தித் திருந்தனள்;
சிந்தனைத் திரையில் சென்றபன் னிகழ்ச்சிகள்
வந்து மறைந்தன; தந்தையின் நினைவும்
நொந்தஅவ் வுளத்தில் நுழைந்தது; ஐயகோ!
மொழிக்குறும் பகைமை முதுகிடப் பொருதனை! 50
இழுக்குறும் அடிமை இரிந்திட உழைத்தனை!
வழுக்களைந் தினத்தவர் வாழ்ந்திட மொழிந்தனை!
ஆயினும் அந்தோ அறிவிலார் கூடி,
நாயினும் கீழோர் நயவஞ் சகரால்
கொன்றனர் நின்னைக் கொடுமை! கொடுமை! 55
என்றெழும் உணர்ச்சி நெஞ்சினைக் கொன்றிடத்
துயரம் புனலாய்த் துணைவிழி வழியா
உயிரொடு வெளிவரல் ஒப்ப வழிந்தது;

பூங்கொடி தெளிதல்

 இத்துயர் கண்ட எழில்மதி முகிலுட்  
 புக்கது; பின்னர்ப் புத்தொளி வீசிச்  60
 சிரித்தது வானில்; சிந்தனை நெஞ்சினில்

விரித்துள கவலை விரைந்து கலைந்திட
அடுத்த தறிவொளி, விடுத்தனள் இடுக்கண்;
உடுக்கணம் இதனை உற்று நோக்கின;
முத்தக் கூத்தனை மூடிய கல்லறை 65
சித்தத் தெழுந்தது சிலிர்த்தனள் உடலம்;
நினைதுயர் நீங்க நெஞ்சகம் சிரித்தனள்;
முனைவொடு பணிசெய முயன்றனள் நங்கை;

பூங்கொடியின் புகழ்மணம்

நாடொறும் அறிவுரை நயந்துரைத் திருந்தனள்

 

வீடுகள் தோறும் விருந்துக் கழைத்தனர், 70
கேட்போர் பலராய்க் கிளைத்தனர் பல்கினர்,
வேட்போர் தொகையும் மிகவாய்த் திரண்டன,
ஒன்றே குலமெனும் உணர்வு விரிந்தது;
நன்றே செய்தனள் நம்முயர் தலைவி
என்றே தொழுதனர் இசைத்தனர் அவள்புகழ்; 75
உள்ளம் பொய்யா துழைப்பவர் எண்ணம்
எள்ளள வும்பிழை ஏலா தீண்டெனும்

கொள்கை நிலைத்திடச் செய்தனள் கொடியே. 78

 சேக்கை - படுக்கை, பொருதனை - போரிட்டாய், இரிந்திட - விலக, வழு - குற்றம், முகில் - மேகம்.
வேட்போர் - விரும்புவோர், கொடி - பூங்கொடி.

(தொடரும்)

கவிஞர்முடியரசன், பூங்கொடி