Showing posts with label மொழி மாற்றச் சொற்கள். Show all posts
Showing posts with label மொழி மாற்றச் சொற்கள். Show all posts

Monday, March 4, 2024

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1079- 1097

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1071- 1078 தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1079- 1097

(கவிஞர் சுரதா கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

  1. அருத்த சாத்திரம் – பொருள்நூல்
    தன்னநுபவத்திற்கு இரண்டு பங்கும், ஆசுத்திக்கு ஒரு பங்கும், அறத்திற்கு ஒரு பங்குமாகப் பங்கிட்டு வைக்க வேண்டுமென்று பொருணூலே சொல்லுதலால், அறத்துக்கு நாலிலொரு பங்கு சொல்லப்பட்டது.
    நூல் : திரிகடுகவுரை, இரெளத்திரி, ஆண்டு ஆறாம் பதிப்பு,
    ⁠பாடல் – 21, பக்கம் – 13
    உரையாசிரியர் : திருக்கோட்டியூர் இராமநுசாசாரியர்★
  2. கிருடடிபட்சம் – தேய்பிறை
  3. சுக்கில பட்சம் – வளர்பிறை
  4. பினாமி – பேர் இரவல்
    க. பாலசுப்பிரமணியன், பி. ஏ., பி. எல்,
    சீர்காழி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்).
  5. Punctuation – குறியீடு
    இப் புத்தகத்தை ஊன்றிப் படிக்கும் மாணவர்கள் தம் வாழ்நாளைப் பயனுறச் செய்து கொள்ளல் வேண்டுமென்னும் நோக்கமே இதனைத் தொகுத்ததற்குக் காரணமாம். மாணவர்கள் செய்யுள்களையும் வசனங்களையும் எளிதாகப் படித்துக் கொள்ளுமாறு பதப்பிரிவுகளும் அவ்விடத்திற்கேற்ற (Punctuation) குறியீடுகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன.
    நூல் : செந்தமிழ் நூன்மாலை, பாயிரம், பக்கம் – 4
    தொகுப்பாசிரியர்கள் : கோ. வடிவேலு செட்டியார், ஆ. நா. கன்னையா
  6. இலண்டன் டைம்சு (The London Times)பிரிட்டீசு பத்திரிக்கை
  7. பீகிங் கெசெட்டு (Peking Gazette) சீனப்பத்திரிக்கை
  8. இரங்கூன் கெசெட்டு (The Rangoon Gazette) பருமா பத்திரிக்கை
  9. இரங்கூன் மெயில் (The Rangoon Mail) பருமா பத்திரிக்கை
  10. சிலோன் கெசெட்டு சிலோன் பத்திரிக்கை
  11. கொளும்பு சர்னல் (The Colombo Journal)
  12. கண்டி எரால்டு (The Kandy Herald)
  13. சிலோன் மார்னிங் லீடர் (The Ceylon Morning Leader)
  14. சிலோன் டெய்லி நியூசுஸ் (The Ceylon Daily News)
  15. .. டைம்சு ஆப் சிலோன் (The Times of Ceylon)
  16. சிலோன் அப்செர்வர்
  17. சிலோன் இண்டிபெண்டெண்டு (The Ceylons Independent)
  18. இந்தியா கெகெஜட் (The India Gazette)
  19. பெங்கால் ஃகார்க்காரன் (The Bengal Harkara)

(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்

Monday, February 26, 2024

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1071- 1078

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1066-1070 – தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1071- 1078

(கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

  1. அறுவை – துணி
  2. சவளி – ஆடை
    அறுக்கப்படுவதனால் அறுவை என்றும், துணிக்கப்படுவதனால் துணி என்றும், சவண்டிருப்பதனால் சவளி என்றும் ஆடை பல பொதுப் பெயர் பெறும். சவளுதல் – துவளுதல். மென் காற்றிலும் ஆடுவது (அசைவது) ஆடை, சவளி என்னும் தமிழ்ச் சொல் த்ஜவளி என்று தெலுங்கிலும் ஜவளி என்று கன்னடத்திலும் எடுப்பொலியுடன் ஒலிக்கப்படுவதாலும், நாம் அவ்வாறே தமிழிலும் ஒலிப்பதாலும், வடசொல்லென்று தவறாகக் கருதப்படுகின்றது.
    வடமொழியில் இச்சொல் இல்லை. எனவே ஜவுளிக்கடை, ஜவுளி வாணிகம் என்பன சவளிக்கடை, சவளி வாணிகம் என எழுதப்படுதலே பிழையற்றதாம்.
    இதழ் : தேனமுதம் (மார்ச்சு 1972), அடை- 2, துளி – 13, பக்கம் – 51
  3. தேசாபிமானம்
    தந்தையே சுவர்க்கம், தந்தையே
    தருமம், தந்தையே சிறந்த தவம்;
    தந்தை மனமகிழ்ந்தால் தேவர்கள் மனமகிழ்கிறார்கள்.

குழந்தையைத் தானே சுமந்து
பெற்று வளர்ப்பதால், தாயானவள் தந்தையினும் மேல்.
பிறந்த நாடும்
சுவர்க்கத்தினு மேலானவை

  • மகா நிருவாண தந்திரம்

  • ‘இந்த நாடு என் சொந்தநாடே, என் தனையே
    தந்த நாடே என்றுமகிழ் நெஞ்சில் என்றும் எண்ணிலா –
    ஒருவன் தனையும் கண்டதுண்டோ கண்ணிலே?’
    சுகாட்டு
    இதழ் தமிழர் நேசன், தொகுதி : 11 பகுதி 2, பக்கம் :167
  1. 1074. இந்தியத் தமிழர்கள்
    திருக்குறள். இது ஆதிவேதத்திற்கு வழி நூலாகும்; இவற்றுள் செந்நாப்புலவர் யதார்த்த சீவிய சரிதம், அவரது கடவுள் வாழ்த்து மூலம், முதல் அறத்துப்பால் மூலம் இவைகளுக்கு க. அயோத்திதாச பண்டிதர், பதம், கருத்து, பொழிப்பு, அகலவுரைகளுமுண்டு. இந்தியத் தமிழர்களுக் கின்றியமையாதவனாகிய சிறந்த நூலாகும்.
    நூல் : நிகழ்காலத்திரங்கல் (1925)
    ⁠சித்தார்த்த புத்தக சாலையார்,
    கோலார் – தங்க வயல்(கோல்ட் பீல்ட்)

  1. பூவராகம் – நிலப்பன்றி
    திருத்தில்லையில் வேளாளர் குலத்தில் வைணவ சமயத்தில் ஆ. பூவராகம் பிள்ளை 1899 ஆம் ஆண்டு நவம்பர்த்திங்கள் இருபத்தேழாம் நாள் பிறந்தார். தந்தையார் பெயர் ஆதிமூலம் பிள்ளை.
    1076. சித்ரம் – அழகு
    1077. கரி – கைம்மா (யானை)
    1078. காந்தன் – கணவன்

(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்

Monday, February 19, 2024

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1066-1070



(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1061-1065 – தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1066-1070

(கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

  1. Border – வரம்புகள்
    பூஞ்செடிகளைக் சூழ்ந்து கோலப்பட்டிருக்கும் வரம்புகளில் விதவிதமான கள்ளிகளும், கீரைகளும், புற்களும், சிறு செடிகளும் உள்ளன. ஐரோப்பியரது பங்களாக்களிலேயே பூக்கள் பறிக்கப்படாமல், கொத்துக் கொத்தாகச் செடிகளிலே புன்முறுவல் தவழும் இன்முகத்துடன் மிளிர்கின்றன.
    நூல் : தமிழ்நாடு பயணக் கட்டுரைகள் (1968), பக்கம் : 147
    எழுதியவர் : அரு. சோமசுந்தரம், ஊழியன் 21-9.1926
    தமிழ் வாரப் பத்திரிகை, காரைக்குடி.

தொகுப்பு : ஏ. கே. செட்டியார்

  1. Under Ground Drainage – புதை சாக்கடை
    ‘எனக்கு அண்டர்கிரவுண்ட் ட்ரெயினேஜ்’ என்பதற்குத் தமிழில் எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை. நினைத்துக் கொண்டேயிருந்தேன்; சரியான சொல் கிடைக்கவில்லை. சில திங்கள் சென்றபின் ஒரு சிற்றூருக்குச் சென்றிருந்தேன்; அங்குள்ள ஒருவரிடம் என்னய்யா உங்களூரில் வளர்ச்சித் திட்டங்களெல்லாம் எப்படி? என்று கேட்டேன். அவர் விளக்குகள், சாலைகள் போடுவது போன்றவற்றைக் கூறிவிட்டுப் ‘புதை சாக்கடையும்’ அமைக்கப் போகிறார்கள் என்றார்.
    எனக்குப் புதையல் கிடைத்தது போலத் தனித்தமிழ்ச் சொல் கிடைத்தது. Under Ground Drainageகுப் புதை சாக்கடை என்ற சொல் எவ்வளவு பொருத்தம். இது போன்ற வளமான சொற்களைக் கொண்டவர்கள் நாம்.
    இதழ் : தமிழ்ப் பாவை 7, 11. 1967, மலர் -7 இதழ் – 11
    சொற்பொழிவாளர் : கி. ஆ. பெ. விசுவநாதன்
  2. கடிகாரம் – காலக் கருவி
    அறிவுடையவர்களாகத் தங்களைத் தாங்களே மதித்துக் கொண்டிருக்கும் செல்வர் சிலருக்கு முன்னுண்டது நன்கு செரித்துவிட்டது எனத் தாமறிந்து கொள்ளாமல், அறிவற்ற பொருளாகிய காலக் கருவி (கடிகாரம்) அதனையுணர்த்த, மேலும் மேலும் பஞ்சுப் பொதியடைப்பது போல வயிற்றை அடைத்துத் தமது அருமை உடலைக் கெடுத்துக் கொள்கிறார்களே! இஃதென்ன அறியாமை!
    நூல் : கட்டுரைப் பொழில் (1958), பக்கம் 15
    நூலாசிரியர் : பெருஞ்சொல் விளக்கனார். முதுபெரும் புலவர்
    அ. மு. சரவண முதலியார்
    (1936ல் நிகழ்த்திய பெரிய புராணச் சொற்பொழிவிலிருந்து எடுக்கப் பெற்றது.)
  3. மன்னார் கோயில் – மன்னார்குடி
    நூல் : மன்னார்கோயிற் புராணம் (1855)
    நூலாசிரியர் : திரிசிரபுரம் மகாவித்வான் கோவிந்த பிள்ளை, கோயில் குடி
  4. சொற்பொழிவு
    உபந்யாசம், பிரசங்கம் என்ற சொற்களுக்குப் பதிலாகத் தற்போது தமிழ் மக்களிடையே சொற்பொழிவு எனும் அழகான சொல்லை உருவாக்கியவர் திருநெல்வேலியைச் சேர்ந்த பால்வண்ண முதலியார் என்பவராவார். எப்படி மேடையில் பேசுவது என்பது பற்றிச் சொற்பொழிவாற்றுப்படை என்ற பெயரில் ஒரு சிறந்த நூல் இயற்றினார். உபந்நியாசம் என்பதற்குப் பதிலாகச் சொற்பொழிவு என்ற புதிய தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தியதற்காக அவரை அக்காலத்தில் பலர், ‘அதோ சொற்பொழிவு போகிறது’ என்று கேலி செய்தனராம்!
    இதழ் : (கலைவாணன் (25, 9, 1961), மலர் – 2. இதழ் – 21.

(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்

Monday, February 5, 2024

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1048-1060

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1041 – 1047 : தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் :

1048-1060

(கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

  1. சைக்கிள் சாப் – மிதிவண்டி நிலையம்
  2. பிரஸ் – அச்சகம்
  3. சலூன் – முடி திருத்தும் நிலையம்
  4. சவுளிக்கடை – துணிக்கடை
  5. மளிகைக்கடை – பலசரக்குக் கடை
  6. செனரல் ச்டோர்சு – பல பொருள் நிலையம்
  7. போட்டோ ச்டுடியோ – நிழற்பட நிலையம்
  8. ரெசுடாரண்ட் காபி கிளப் டீ ச்டால் – சிற்றுண்டிச் சாலை
  9. ஓட்டல் – உணவு விடுதி
  10. (இ)லாண்டரி – வண்ணப் பணிமனை
  11. டைலரிங் மார்ட் – தையற்கடை
  12. ஐசு கூலிங் – சுவைநீர் நிலையம்
  13. மருந்து சாப் – மருத்துக் கடை

இங்ஙனம்
மறைமலையடிகள் மன்றத்தார்
பாபநாசம் (தஞ்சை மாவட்டம்) புலவர் உசேன் செயலாளர் பாபநாசம்
மறைலையடிகள் மன்ற இரண்டாம் ஆண்டு விழா அழைப்பிதழ்

(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்

Monday, January 29, 2024

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1041 – 1047

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1030- 1040 : தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1041 – 1047

(கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

  1. பாததீர்த்தம் – அடிபெய்புயல்
    நூல் : வாயுசங்கிதை (விரோதி வரு.ஆவணி)
    நூலாசிரியர் : குலசேகர வரகுணராம பாண்டியர்
    ஆய்வாளர் : பொம்மபுரம் சிரீ சிவஞான பாலைய தேசிகராதீனத்துச்
    சிதம்பரம் இராமலிங்க சுவாமிகள்
  2. பாங்கு * – Bank
    பேங்க் என்பதற்கு வங்கி என்பது பொருள் கொடா வகையில் இருப்பதால் (பணத்தையும் வரவு செலவையும் பாங்கு செய்யும் அமைப்பு என்று) பொருள் படும் நிலையில், எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பாங்கு எனவே கொள்ளலாம். தனியார் ஏற்பாடுகளுக்கு, வட்டிக்கடை, காசுக்கடை என்ற பழஞ்சொல்களே இருக்கலாம்.
    வெங்கடாசலம் வாழ்வியல் (திங்களிருமுறை ஆசிரியர்)
    இதழ் : வாழ்வியல் 2வது ஏடு, 15-9-1960, பக்கம் : 18
  3. Fountain – இலவந்திகை
    இக்காலத்தில் நீரைக் குறைத்தும் பெருக்கியும், அலங்காரமாக வெளியிடும் நீர் ஊற்றினை Fountain என்கிறோம். இது பெரிதும் சோலைகளில் இருப்பதையும் அறிகிறோம். இவ்வமைப்புக்குத் தமிழர்கள் அக்காலத்தில் இட்ட பெயர் இலவந்திகை என்பது.
    நூல் : தமிழ் நூல் வரலாறு (1962) பக். 23
    நூலாசிரியர் : பேராசிரியர், வித்துவான் பாலூர்
    கண்ணப்ப முதலியார், எம்.ஏ.பி.ஓ.எல். தமிழ்த்துறைத் தலைவர், புதுக்கல்லூரி சென்னை.
  4. Under Ground Drainage – கரந்து படை
    இக்காலத்தில் Under Ground Drainage எனப்படும் கழிநீர் செல்லக் கட்டப்படும் அமைப்பு, பழங்காலத்தில் கரந்து படை எனப்பட்டது. இது தெரு நடுவில் அமைந்தது. கருங்கல்லால் மூடப்பட்டது. இக்காலத்தில் இரும்பு வட்டக் கருவியால் மூடப்பட்டுள்ளது.

நூல் : தமிழ் நூல் வரலாறு (1952) பக்கம் : 23
நூலாசிரியர் : பேராசிரியர், வித்துவான் பாலூர் கண்ணப்ப முதலியார் எம்.ஏ., பி.ஓ.எல்.,

  1. ரீடர் – நூல் ஆய்வர்
    வெள்ளை வாரணனார் இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ரீடராக (நூல் ஆய்வர்) இருக்கிறார். நல்ல பேச்சாளர். வித்துவான் பட்டம் பெற்றவர். தொல்காப்பியம், சங்க காலத் தமிழ் மக்கள், குறிஞ்சிப் பாட்டராய்ச்சி நூல்கள் இவரால் எழுதப்பட்டுள்ளன. சித்தாந்தச் செம்மல், திருமுறைத் தமிழ் மணி என்னும் பட்டமுடையவர்.
    மேற்படி நூல் : தமிழ் நூல் வரலாறு (1962) பக்கம் : 448
  2. தாமரைக்கண்ணி
    என் இயற்பெயர் சலசாட்சி(ஜலஜாட்சி) என்பது. 1938இல் நடந்த இந்தி எதிர்ப்பு இயக்கத்தின்போது புலவர் அன்பு கணபதி அவர்களும் யான் தந்தையெனப் போற்றும் அருணகிரி அடிகளாரவர்களும் என் பெயரைத் தாமரைகண்ணி என மாற்றிவிட்டார்கள். யான் அதனை விருப்புடன் ஏற்றுக்கொண்டேன்.
    தாமரைக் கண்ணி 15. 10. 1961
    இதழ் : முக்கனி மரம் – 1 கனி – 5
  3. Paper – காயிதம்
    Paper என்பதற்கு தாள் என்பதைவிட, கா + இதம் (எழுதிய நூலை இனிது காத்தற்குரிய என்ற பொருள்பட) காயிதம் என்றே கொள்ளலாம்.
  • பி.எம். வேங்கடாசலம்
    ஆசிரியர் : வாழ்வியல் (திங்களிருமுறை)
    2வது ஏடு, தி.வ. ஆண்டு 1991 புரட்டாசி – 1, பக்கம் : 18
    16.9.1960

(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்

Monday, January 22, 2024

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1030- 1040

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1021-1029 : தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் :

1030- 1040

(கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

  1. Thermometer – அனற்கோல்
    அனலின் அளவை நமது உறுப்புகளின் உணர்ச்சியால் பிழையின்றி அறிய முடியுமா? முடியாது. மிகவும் சூடாகவுள்ள நீரிலும், குளிர்ந்த நீரிலும் நமது கைவிரல் வைத்து உணர்வோமானால், ஒன்று ஒன்றைவிட சூடாக உள்ளதா, தன்மையாக உள்ளதா என்று உணர முடியுமே ஒழிய, எந்த அளவுக்கு அவை அனலைப் பெற்றுள்ளன. அவைகளின் அனல் நிலை (Temperature) என்ன என்பவற்றைச் சரியான முறையில் தெரிந்து கொள்ள முடியாது. இம்மாதிரியான சிக்கல்கள் மனிதனை மேலும் எண்ணத் தூண்டியது.
  2. சிரீலசிரீ – உயர்சீர்த்தி (1956)
    நல்லவராய் வாழ்க!
    உயர் சீர்த்தி குன்றக்குடி அடிகளாருக்கு
    குறிப்பு : உயர்சீர்த்தி – இச்சொல் சிரீலசிரீ என்பதைச் சுட்டும் பழந்தமிழ்ச் சொல்.
    கா. சம்பத்து
    மதுக்கூர் (1956)
  3. வாக்கியம் – சொற்கூட்டம்
    சொற்கள் தொடர்ந்து நின்று, முடிவு பெற்ற கருத்து ஒன்றினைத் தெரிவித்தால், அச்சொற் கூட்டம் வாக்கியம் ஆகும். அதனை, வசனம் என்றும் சொல்வதுண்டு.
    நூல் : பயிற்சித் தமிழ் (1956) (இரண்டாம் பாகம்), பக்கம் : 1
    நூலாசிரியர் : தென் புலோலியூர், மு. கணபதிப்பிள்ளை
  4. பஞ்சாட்சரம் – அஞ்செழுத்து
    அஞ்செழுத்து என்பவர் சிறந்த கவிஞர். இவருக்குப் பஞ்சாட்சரம் என்று பெற்றோர் பெயரிட்டனர். அப்பெயரை மாற்றி அஞ்செழுத்து என்று 1957ஆம் ஆண்டில் இவர் வைத்துக் கொண்டார்.
    வளனரசு (1957)
  5. அபேட்சகர் – வேட்பாளர் (1957)
    நூல்களைத் தேடிவாங்கிப் படிக்கும் ஆர்வலர், நூலகத்தும்பி, அறிவுத் தேனி
    ஊ. செயராமன்
  6. லிப்சுடிக்(கு) – செந்நிறக்குச்சி
  7. கொவ்வை – உதடுகளைக் குறிக்கும்
    செந்நிறக் குச்சி ஒன்றால்
    சிவப்பேற்றி மெருகிட்டு
    எச்சிலோ, நாக்கோ
    இடறிப் படாவண்ணம்
    மிக்க கருத்துடனே
    அதைக் காப்பர்
    இதழ் : எழிலன் கவிதைகள் (1957) பக்கங்கள் 19, 20
    நூலாசிரியர் : வலம்புரி எழிலன்
  8. ஆர்வகர் சங்கம்
    சினிமா இரசிகர்கள் சங்கத்தை, “விசிறிகள் சங்கம்’ என்றோர், ரசிகர் சங்கம் என்றோ அழைப்பதை விட ஆர்வகர் சங்கம் என்று அழைக்கலாம்.
    முனைவர் ஏ.சி. செட்டியார் (19. 6. 1960)
  9. காளி – கருநிறமுடையவள்
  10. துருவன் – அழிவில்லாதவன்
  11. வேதனம் – அறிவு

(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்

Monday, January 15, 2024

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1021-1029

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1010 -1020- தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1021-1029

(கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

  1. செயராமன் – வெற்றி வில்லாளன் (1955)
    கவிஞர் வெற்றி வில்லாளன்,
    தாத்தையங்கார் பேட்டை, திருச்சி மாவட்டம்.
  2. Dearness Allowance – அருமைப்பாட்டுப் படி
    போர்க் காலத்தில் தோன்றிய புதுச் சொற்களில் ’பறக்குங்குண்டு’ என்பது ஒன்று. இதனையே ஆளில்லா விமானம் என்பாரும் உண்டு. ’பஞ்சப்படி’ என்பது பெருவழக்காக வழங்குகிறது. (Dearness Allowance) என்பதை எப்படியோ இப்படி மொழி பெயர்த்துவிட்டனர். ஆயினும் அதனை இனி அருமைப்பாட்டுப் படி என மாற்றப் போவதில்லை.
    நூல் : தமிழோசை (1955), பக்கம் , 89
    நூலாசிரியர் : செந்தமிழ்க் காவலர்
    முனைவர் அ. சிதம்பரநாதன், எம்.ஏ., பிஎச்.டி., (தமிழ்த்துறைத் தலைவர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம்)
  3. Light Signal – ஒளி அஞ்சல்
    தந்தி என்பது ஒலிமுறையில் உள்ள பேச்சு மொழியல்ல. மொழியிலுள்ள எழுத்துகளுக்குத் தனி ஒலிக்குறிப்பு வைத்து அவ்வொலிக் குறிப்புகளினால் மொழியை அனுப்பவும் வாங்கவும் உள்ள சாதனமே தந்தி. இதே முறை ஒளி அஞ்சலிலும் (Light Signal) பயன்படுத்தப்படுகிறது.
    நூல் : தமிழில் தந்தி (1955), பக்கம் : 21
    நூலாசிரியர் : அ. சிவலிங்கம்
  4. காபியாசுபிரின் – தலைவலி மாத்திரை
    தலை வலிக்கொரு மாத்திரை, தடுமனுக்கு ஒரு மாத்திரை, தவறுதலா தின்னுப்பூட்டா தருமலோக யாத்திரை என்று மிஃச் மாலினி படத்தில் பாடியுள்ள சுந்தரி பாய், முதன் முதலில் தோன்றியது. காபியாசுபிரின் (தலைவலி மாத்திரை) விளம்பரப் படத்தில்தான்.
    நூல் : சினிமா நட்சத்திரங்களின் இரகசியங்கள் (1955) பக்கம்
    நூலாசிரியர் : சுந்தர்
  5. மகாமகோபாத்தியாயர் – பெரும்பேராசான்
    பண்டிதமணியின் தொண்டுகளை அரசியலார் அறிந்தனர். பட்டம் அளித்துச் சிறப்பிக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். 1941 ஆம் ஆண்டு, மன்னர் பிறந்த நாட்கொண்டாட்டம் நிகழ்ந்த போது ‘மகாமகோபாத்தியாயர்’ (பெரும்பேராசான்) என்னுஞ் சிறப்புப் பெயரை வழங்கிப் போற்றினர்.
    நூல் : தமிழ்ப் புலவர் வரிசை (1955), (எட்டாம் புத்தகம்)
    ⁠பக்கம் : 82
    நூலாசிரியர் : சு. அ. இராமசாமிப் புலவர்
  6. மா. மார்க்கபந்து – மா. வழித் துணைவன்
    மா. வழித்துணைவன்
    நாடக ஆசிரியர், கவிஞர், ஆய்வாளர்,
    எழுத்தாளர், திருவள்ளுவர் நாடகம்,
    தென் குமரி தெய்வம் நாவல்
    திருக்குறள் நெறித் தோன்றல்,
    குறள் படைப்புச் செம்மல்
    மார்க்கபந்து என்னும் பெயரை 1955 ஆம் ஆண்டில் மா. வழித்துணைவன் என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார் இவர்.
  7. தொலைக்காட்சி
    நாட்டிய நடிகை செளதாமினி ‘சுவருக்கசீமா’வில் தொலைக்காட்சிகளில் பானுமதிக்குப் பதிலாக ஆடியிருக்கிறார்.
    நூல் : சினிமா நட்சத்திரங்களின் இரகசியங்கள் (1955), பக்கம் . 8
    நூலாசிரியர் : சுந்தர்
  8. நவநீத கிருட்டிணன் – பொன்னி வளவன் (1956)
    ஆசிரியர், சிறந்தகவிஞர்
    1029 Botany – பயிரியல்
    ஆங்கிலச் சொற்களையும் பிறமொழிகளிலுள்ள சொற்களையும் தேவையான போது எடுத்தாளலாம் என்பர் சிலர். இப்போது அங்ஙனம் எடுத்தாள்வதிலே பாரதூரான குறை வராவிட்டாலும் – இனி வருங்காலத்தில் ஆங்கிலத்துடன் இணைந்த பிறமொழிகளும் நது நாட்டிலே செல்வாக்குக் காட்டாத காலத்தில் – அப்படிப்பட்ட சொற்களின் வரலாறு இன்னதென்று கூடத் தெரியாமல், உயிரற்ற வெறுஞ் சடலங்களாகவே அவை உலவுவனவாம். எனவே, இவற்றையெல்லாம் நாங்கள் சிறிது கவனிக்க வேண்டும். Botany எனப்படும் ‘பயிரியல்’ நூலில் எத்தனையெத்தனை பிறமொழிச் சொற்களை மனனஞ் செய்து அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
    நூல் : பயிற்சித் தமிழ் (1956), இரண்டாம் பாகம்) பக்கம் : 97
    நூலாசிரியர் தென்புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை

(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்

Monday, January 8, 2024

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1010 – 1020



(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1003-1009- தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1010 – 1020

(கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

  1. Encyclopedia – பேரகராதி
    பல ஆயிரமாண்டுகட்கு முன்பே சீனர்கள் நாகரீகத்தில் முதிர்ச்சி பெற்று விளங்கினார்கள். இவர்கள் தொன்று தொட்டே பட்டு, காகிதம், வெடி மருந்து, அச்சுப் பொறி, திசைக்கருவிகள், கண்ணாடி முதலிய பலவகைத் தொழில்களில் முன்னேறி இருந்தார்கள். இவர்கள் சிற்பம், சித்திரம் இவற்றில் பெயர்போனவர்கள். உலகத்திலேயே மிகப்பெரிய பேரகராதி (Encyclopedia) முதன் முதலில் சீனாவில் தான் எழுதப்பட்டது.
    நூல் : சீனத்துச் செம்மல் (1952), பக்கம் – 6
    நூலாசிரியர் : புலிகேசி
  2. (உ)ரூபா – மாடு
    பெகுஸ் (pecus) என்ற லத்தீன் வார்த்தைக்கும், பெய்கு என்ற செருமன் வார்த்தைக்கும், (உ)ரூபா என்ற வடமொழி வார்த்தைக்கும், மாடு என்றே பொருள். (உ)ரூபா என்ற சொல்லே திரிந்து (உ)ரூபாய் எனத் தமிழில் வழங்குகிறது. (உ)ரூபா என்ற வடசொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லாகத் தமிழில் மாடு என்ற சொல் வழங்கப் பெறுகிறது.
    நூல் : பணம் (1953) பக்கம் – 14
    நூலாசிரியர் : ரெ. சேஷாசலம், எம்.ஏ.,
    ⁠(ம. தி. தா. இந்துக் கல்லூரி பொருளாதார ஆசிரியர்)
  3. Refrigerator – குளிரச் செய்யும் பொறி
  4. Microscope – அணு நோக்கி
    விஞ்ஞானிகளுக்குத் தேவைப்படும் அணு நோக்கி பரிசோதனைப் பொறி (Testing Machine) மின்சாரச் சூளை அடுப்பு. ஆய்வுத் துலை (Analytical Balance) எக்சுரே பொறி, அல்ட்டுரா வயலெட்டு (ஊதா) ஒளிக் கதிர்கள் வீசும் பொறி, வெப்ப ஒளிக்கதிர் வீசும் பொறி (Heat – Ray), கண்ணாடி உருக்கும் பொறி, குளிரச் செய்யும் பொறி (Refrigerator),மற்றைய வீட்டியல் சிறு பொருள்கள், தண்ணீரை வெந்நீராக்கும் மின்சாரக் கருவி, மின்சார வீட்டடுப்பு, பல்புகள், பாதரச பல்புகள் முதலிய எல்லாப் பொருள்களும் சப்பானில் உற்பத்தியாகின்றன.
    நூல் : நான் கண்ட சப்பான் (1953), இரண்டாம் பதிப்பு
    ⁠பக்கம் : 65, 66
    நூலாசிரியர் : க. இராமசுவாமி நாயுடு, முன்னாள் மேயர், சென்னை.

  1. இரணியப் பிண்டம் – பொற்கட்டி
    இந்தியாவில் (இ)ரிக்குவேத காலத்திலேயே (சுமார் கி.மு. 2000) பொற்கட்டி, பணமாக உபயோகிக்கப்பட்டதாக அறிகிறோம் அது. இரணியப் பிண்டம் என்றழைக்கப்பட்டது. தமிழில் அதன் நேர் பொருள் பொற்கட்டி கந்த புராண ஆசிரியர் கச்சியப்ப சிவாசாரியார் இரணியனைப் பொன்னன் என்றே கூறுவர். ஆடகப் பெயரின் அவுணர் மார்பினன் என வரூஉம் குமர குருபரர் வாக்கும் (திருவாரூர் நான்மணிமாலை) ஈண்டு நினைவு கூறற்பாலது.
    நூல் : பணம் (1953), பக்கம் – 15
    நூலாசிரியர் : (இ)ரெ. சேசாசலம், எம்.ஏ.,
    ⁠(ம. தி. தா. இந்துக் கல்லூரி பொருளாதார ஆசிரியர்)

    1015.Under wear – உள் அங்கி
    ஃகிரோ ஃகிடோ – சப்பானிய சக்கிரவர்த்தி ஓர் உடையை ஒரு முறைக்கு மேல் மறுமுறை உபயோகப்படுத்துவதில்லை. உள் அங்கி கூட (Under Wear) மறுமுறை அணிவதில்லை.
    நூல் : தம்மி, 10.10.1953, பக்கம் :12, மலர் : இதழ் 2
    சொல்லாக்கம் : தில்லை வில்லாளன், பி.ஏ. (ஆனர்சு)
  2. புலவர் தி. நா. ஞானப்பிரகாசம் – அறிவு ஒளி
    முகவரி : 2 / 25 இணைவு – 2,
    பூங்குன்றனர் தெரு, மறைமலை நகர் – 603 209
  3. Axis – அச்செலும்பு
    இந்த 33 எலும்புகளில் ஒன்று அச்செலும்பு என்னும் பெயரும், இன்னொன்று உலகம் என்னும் பெயரும் பெற்றுள்ளனவே.
    நூல் : பழந்தமிழரும் முருகன், முக்கண்ணன் வணக்கமும் (1954)
    ⁠பக்கம் – 46
    நூலாசிரியர் : முனைவர் தி. இரா. அண்ணமலைப் பிள்ளை
  4. கமகங்கள் – அசைவுகள்
    நம் நாட்டவர்கள் சங்கீத விசயங்களுக்கு முதலிடம் கொடுத்தார்களே தவிர பாவனைகளைப் பற்றியோ, பாடல்களின் உச்சரிப்பைப் பற்றியோ சிந்தித்தார்களில்லை, அதனாலேயே நம் நாட்டுப் பாடல்களின் மெட்டில் பொதுமக்கள் கவர்ச்சி கொள்ளாமல் பிறநாட்டு மெட்டுகளையே அமைத்துக் கொண்டு பாடுவதும், ஆடுவதும் இரசிப்பதும் வழக்கத்தில் அதிகமாகி விட்டது. இதற்குக் காரணங்கள் நம் நாட்டுப் பாடல்களில், பதங்களைச் சரியாக உச்சரிக்காமையும், பதங்களைக் கேட்பவர்கள் புரிந்து கொள்ளதவாறு அதிகமான சங்கீதத்தின் அசைவுகளை (கமகங்களை) அளவுமீறி உபயோகப்படுத்துதலும் ஆகும்.
    நூல் : தென்னிந்திய இசை உலகம் (1954)
    ⁠பக்கங்கள் : 27, 28
    நூலாசிரியர் : எசு. மாணிக்கம் (தென் ஆப்பிரிக்கா)
  5. Lyric – தனிப்பாடல்
    நூல் : புதுமைப்பித்தன் கட்டுரைகள் (1954) பக்கம் 56,
    நூலாசிரியர் : புதுமைப்பித்தன்
  6. மயிலை சண்முக சுந்தரன் – மயிலை முத்தெழிலன்
    குழந்தைகளுக்காகவே வாழ்ந்த மயிலை சிவமுத்து அவர்கள் அன்புச் செல்வனே கவிஞர் மயிலை முத்தெழிலன் அவர்கள். சண்முக சுந்தரம் என்ற பெயரை மயிலை முத்தெழிலன் என்று 1954ஆம் ஆண்டில் இவர் மாற்றி வைத்துக்கொண்டார்.

    (தொடரும்)
    உவமைக்கவிஞர் சுரதா
    தமிழ்ச்சொல்லாக்கம்