Friday, October 11, 2024

அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 7 உ.3. கல்வி ஏமம், 4.கேண்மை ஏமம்

 




(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 6. உ.ஏமம் தொடர்ச்சி)

                    “ஒரு மைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
                    எழுமையும் ஏமாப்பு உடைத்து’’ (398)

இங்கும் ஒருமை, எழுமை மாந்தப் பருவங்களையே குறிக் கும். ஒரு பருவமாகிய சிறுவன் பருவத்தில் ஒருவன் கற்க வேண்டும். கற்றால் அவனுக்கு அக்கல்வி தொடர்ந்து முதுமை வரை வரும் ஏழு பருவங்களுக்கும் பாதுகாப்பு ஆகும்.

கல்வியால் பெற்ற அறிவுப் பாதுகாப்பு ஆறறிவு மாந்தனை உண்மையில் மாந்தனாக வைத்திருக்கும்.

கல்வியை “எண்என்ப, ஏனை எழுத்து என்ப” (392) என்று இரண்டுள் அடக்கினார். சிறுவன் தன் பருவத்தில் கற்கும் எண், எழுத்து எனும் இவையிரண்டும் அவன் வாழ் நாள் வரை கல்விக்கும், செயலுக்கும், வாழ்விற்கும் அடித்தளமாக நின்று அவன் அறிவையும், அறிவார்ந்த வாழ்வையும், அவற்றால் அவனையும் பாதுகாக்கின்றன. முதற் பருவத்தில் சிறுவன் ‘அ, ஆ, இ…… ‘ என எழுத்துகளையும், ‘1,2,3……0’ என எண்களையும் கற்கிறான். இவன் அவ்வாறே அவனது ஏழு பருவங்களுக்கும் துணை. யாக நிற்கின்றன. துணையாக நின்று அவன் மொழியறிவையும், கணக்கறிவையும் பாதுகாத்து ஏமம் செய்கின்றன.

எழுத்து நிலையிலும் எண்நிலையிலும் மட்டுமல்லாமல் குறியீடுகளாகவும் துணையாகின்றன. எழுத்துகளே எண்களாக உதவுகின்றன. தமிழில்,

க—1, உ—2, ரு—5, எ—7, அ—8, ய—10,

ள—100, வ—கால் (¼), தெ—முக்கால் (¾)

வத—முந்திரி, அத—1000 என்றெல்லாம் குறியீடுகளாகத் துணைநின்று ஏமமாகின்றன.

ஆங்கிலத்தில் தேற்ற வாய்பாடாக,

AB3 BC2+CA2 -என்றெல்லாம் எழுத்தும் எண்ணுமாக முன் பருவத்தில் கற்கப்பட்டவை, பின் பருவங்களில் குறியீடுகளாக நின்று அறிவிற்கு ஏமமாகின்றன. பல கண்டுபிடிப்புகளுக்கு அடித்தளக் குறியீடுகளாக உதவி ஏமமாகின்றன.

இக்காலக் குழந்தைக் கல்வி மழலையிலேயே தொடங்குகின்றது. இக்குழந்தைக் கல்விமுறையில் கிண்டர்கார்டன் முறையை அறிஞர் புரோபெல் என்பார் அமைத்தார். மாண்டிசோரி அம்மையார் அமைத்த முறை அவர் பெயரால் நடந்துவருகின்றது. முதற் சிறுவன் பருவத்தில் விளையாட்டுச் செயலறிவோடு கூடிய கல்வியை இவை தருகின்றன. இம்முதற்பருவக் கல்வி முதுமைப் பருவம் முடிய அவனை அறிதிறன் (Intelligence), உடையவனாக்கி அவனுக்கு ஏமமாகின்றது.

குழந்தையின் அறிதிறனை ஆய்ந்தவர் கலிபோர்னியா நாட்டுப் பேராசிரியர் பினே (Binet) என்பவர். இவர்,

‘குழந்தைப் பருவத்தில் உள்ள அறிதிறன் செப்பமாக்கப் பெற்றால் அது அவன் வாழ்நாள் வரை அவனைப் பாதுகாக்கும்’ என்று கண்டறிந்தார்.

மற்றொரு பேராசிரியர் தெருமென் (Dermen) என்பார் தம் ஆய்வில்,

‘குழந்தைகள் வளர்ந்த பின்னர், தாம் குழந்தைப் பருவத்தில் பெற்ற அறிதிறனால் உலகப்புகழ் அடைவர்’ என்று கண்டறிந்தார்.

இக்காலத்தில் கண்டறியப்பட்ட கல்வி அறிவியல் (Educational Science) மிக எளிமையாக எழுமையும் ஏமாப்பு உடைத்து” என்னும் தொடரில் பொதிந்துள்ளது.

மேற்கண்டவற்றால் கல்வி ஓர் ஏமம் ஆகிறது.

கல்வி ஓர் ஏமத் தொடர்பில்

கல்வியறிவுடையார் அதன் வலிமையால் பல வகையில் ஏமம் ஆவார். அவற்றுள் ஒன்று அவரை நட்பாக கேண்மையாகக் கொள்ளல். இதனை,

“மூத்த அறிவுடையார் கேண்மை” (441) என்றார்.

இவ்வகைக் கல்வி ஏமத்தொடர்பில் ‘கேண்மை ஏமம்’ தொடர்கின்றது.

கேண்மை என்பதற்கு நட்பு என்பது பொருள். நட்பினும் அழுத்தமானது கேண்மை.

கேண்மை தனியொருவர்க்கும் வேண்டும்; நாட்டிற்கும் வேண்டும். கேண்மையின் சிறப்பான பயன், தன்னைத் தழுவியவருக்குத்தான் ஏமமாக அமைவது. அவ்வாறு ஏமம் தராத கேண்மை கொள்ள வேண்டாத ஒன்றாகும். இதனைத் திருவள்ளுவர்,

‘ஏமம் சாராக் கேண்மை’ என்று பொதுவில் குறிக்க வேண்டியவர், இதற்கு ஓர் அழுத்தம் கொடுக்க எண்ணி,

“ஏமம் சாராச் சிறியவர் புன்கேண்மை” என்றார். சிறியவரும் கேண்மை செய்வார். ஆனால், அது “புன்கேண்மை’; ஏமம் செய்யாது. இதனை

“எய்தலின் எய்தாமை நன்று” (815) என்று முடித்தார்.

எனவே புன்கேண்மை ஏமம் ஆகாது.

நல்ல கேண்மை ஏமம் ஆகும்.

இக்கருத்து திருக்குறளில் ‘அரசியல்’ என்னும் இயலில் உள்ளது.

இக்காலம் அரசியல் அறிவியல் (Political Science) நாட்டிற்கு இன்றியமையாததாகத் தோன்றியுள்ளது. கேண்மை ஏமத்திற்கு இன்றைய உலகத்தில் அரசாட்சி நடப்பில் நல்ல சான்றைக் கண்டு வருகிறோம்.

உலகத்து நாடுகளில் சில கூட்டுசேரா நாடுகளாக உள்ளன. இருப்பினும் தெற்காசிய நாடுகள் கேண்மை கொண்டு ஒரு கூட்டாக சார்க் (Saarc) என்னும் அமைப்பை ஏற்படுத்தியுள்ளன. ஏழு நாடுகள் இக்கூட்டு நாடுகள். இந்திய நாட்டுடன் இதில் பாக்கித்தானமும் உள்ளது. இக்கூட்டில் கேண்மை கொண்டிருக்கிறது பாக்கித்தான். ஆனால் இக்கேண்மையில் இருந்து கொண்டே இந்திய நாட்டிற்கு எதிரான கீழறுப்பு வேலைகளில் ஈடுபடுகிறது. காசுமீரத்தில் கமுக்கமாகக் குண்டர்களை அனுப்பிக் கொலை, கொள்ளை, கலவரம் செய்து அம்மாநில மக்களின் ஏமத்தைக் குலைக்கிறது. பம்பாயில் குண்டுகள் வெடிக்கக் காரணமாகி அந்நகர்ப் பாதுகாப்பில் கலக்கம் ஏற்படுத்தியது.

‘சார்க்’கில் கேண்மை உண்டு;

அமுக்கச் செயலால் ஏமம் இல்லை;

இதனால் கேண்மை என்பதே புன்கேண்மையாகிறது.’ நாம் கண்ணால் காணும் இந்த அரசியல் அறிவியலில் முன் னோடிப் பதிவாகத் திருவள்ளுவத்தை

(கேண்மை)

              “செய்து ஏமம் சாராச் சிறியவர் புன்கேண்மை
              எய்தலின் எய்தாமை நன்று” (815)

என்று பேசவைத்தார் திருவள்ளுவர். பாக்கித்தானத்தின் கேண்மை பெறுவதைவிடப் பெறாதிருத்தலே நல்லது என்று நம் நாட்டு மக்கள் எண்ணவேண்டி நேர்ந்துள்ளது.

திருவள்ளுவர் தொலைநோக்காகக் கருதியது போன்று பாக்கித்தானின் இந்தக் கேண்மையை

இனம்போன்று இனமல்லார் கேண்மை” (822) என்றார்.

கேண்மையில் இனத்தாரும் உள்ளனர்;

இனம் அல்லாதாரும் உள்ளனர்.

இவ்விரண்டையும் அடுத்துக் காணலாம்.

(தொடரும்)

Friday, October 4, 2024

அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 6. உ.ஏமம்

 




(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 5. ஈ. இன்பம்-தொடர்ச்சி)

ஏமம் என்றால் பாதுகாப்பு. இடையூறோ, துன்பமோ, அழிவோ நேராமல் பாதுகாப்பளிப்பதும் ஏமம். இவை வரும்போது காத்துக்கொள்வதும் ஏமம். ஏமம், ஏமாப்பு, ஏமார்த்தல் எனும் மூன்றும் ஒரே பொருளன.

நாட்டையோ மக்களையோ உயிரினங்களையோ பகை, இயற்கை, குணக்கேடு, மொழி ஆட்சி முதலியவை தாக்குமானால் பல்வகைப் பாதுகாப்புகள் வேண்டும்.

இப்பாதுகாப்பு எதனால் அமையும்? எதனால் அமையும் என்பது பொருந்தாது. எவற்றால் அமையும் என்பதே பொருந்தும்.

திருவள்ளுவர் பாதுகாப்பனவாகப் படையையும்அரண்களையும்ஆட்சித் திறனையும் கூறியுள்ளார்இவை நாட்டையும் நாட்டு மக்களையும் உயிரினங்களையும் காக்கும்.

மனத்துன்பத்தைவாழ்க்கையைபண்புகளைக் காக்கும் ஏமங்களாகத் திருவள்ளுவர்

          செல்வம் (1.12)

          அடக்கம் (128)

          கல்வி (398)

          கேண்மை(815)

          இனநலம் (458, 459, 306, 868)

          அரண் (742, 744, 750)

பொருளியல்உளவியல்உளப்பகுப்பியல்கல்வியியல்அரசியல்குமுகாயவியல்கட்சி அரசியல்போர்முனை இயல்வாழ்வியல்.

ஆகியவற்றை ஏமமாகக் கூறியுள்ளார்இவை காக்கும்திறத்தைக் கூறியுள்ளமை இக்கால அறிவியல் துறைகள் பலவற்றுக்கு முன்னோடியாக உள்ளது.

செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி

எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து“(112)

இதில் ஆக்கம் செல்வத்தைக் குறிக்கும். இச்செல்வம் நேர்மை உடையவனால் ஆக்கப்பட்டால் அது அவனுக்குப் பின் வாழும் மக்களுக்கும் தொடரும்; நலன்களுக்கும் ஏமம் ஆகும். இதனால் செல்வம் ஓர் ஏமப் பொருளாகிறது.

இன்றளவில் அமெரிக்க நாடு பெரும் வல்லரசு நாடு. குறிப்பிடத்தக்க மேன்மையுடைய வல்லரசு. வல்லரசுடன் வளன் அரசு. இவ்வளத்திற்கு அந்நாட்டில் செல்வம் கொழிப்பதே காரணம். பெரும் செல்வ வளம் கொண்டு அறிவியல் ஆய்வுகளால் மக்களுக்கு ஆக்கம் தருகிறது. போர்க்கருவிகளைச் செல்வத்தால் குவித்து எத்தாக்கு தலையும் அழிக்கும் பாதுகாப்பைத் தந்துள்ளது. ஈரானும் அது போன்ற எண்ணெய் வளம் மிக்க நாடுகளும் தம் செல்வ வளத்தால் அந்நாட்டு மக்களைப் பாதுகாக்கின்றன.

இந்நாடுகளின் செல்வவளம் இந்நாட்டு மக்களின் தலைமுறை தலைமுறைக்குப் பாதுகாப்பாக விளங்குகிறது, எதிர்கால வளங்கள் பலவற்றிற்கும் செல்வக் குவியல் பாதுகாப்பாக உள்ளது. இதுதான் திருவள்ளுவரால் ‘எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து’ எனப்பட்டது.

அவ்வந் நாட்டுச் செவ்வங்களின் நிலைக்கு ஒரு விதிப்பு வைத்தால், அச்செல்வம் செப்பம் உடைய வழியில் வர வேண்டும். செப்பம் தவறி வந்த செல்வம் செப்பம் தவறியோர்களாலே பாதுகாப்பற்று அழிக்கப்படும். போரால் மட்டும் அன்று; அவ்வந்நாட்டு மக்களின் செப்பமில்லாத செயல்களாலும் பாதுகாப்பற்றதாகும். இதற்கு ஒர் உவமை கூறித் திருவள்ளுவர்

சலத்தால் (வஞ்சத்தால்) பொருள் செய்து

            ஏமார்த்தல் (பாதுகாத்தல்) பசுமட்

கலத்துள் நீர்பெய்து இரீதியற்று”(660)

என்றார்.

எனவே, திருவள்ளுவர் குறித்த ‘செல்வத்தால் பாதுகாப்பு’ (இருவகையிலும்) இக்கால உலக அரசுகளால் கண்காணும் காட்சியாக வெளிப்படுகின்றது. இது பொருளிய அறிவியலின் குறியாகும்.

செல்வம் பாதுகாப்புத் தருவது. அது போன்று அது பாதுகாக்கப்பட வேண்டியதும் ஆகும். செல்வத்தைப் பேணிப் பாதுகாப்பது போன்று வேறு பலவும் பாதுகாக்கப்படவேண்டும் என்பார் திருவள்ளுவர். அவற்றுள் ‘அடக்கம்’ ஒன்று,

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்

            (ஏனெனில்)

அதனின் ஊங்கு இல்லை உயிர்க்கு(122)

இக்குறளில் உயிர்க்கு ஒப்பில்லாத செல்வம் ‘அடக்கம்’ என்றார். எனவே, செல்வம் போன்று அடக்கமும் ஓர் ஏமம் ஆகிறது.

அடக்கம்‘ ஏமம் ஆவதைத் திருவள்ளுவர் ஓர் உவமையுடன்,

ஒருமையுள் ஆமைபோல் ஐந்து அடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப்பு உடைத்து“(126)

என்று விளக்கினார். இதில் ‘அடக்க’லை ‘ஏமாப்பு’ என்றார்.

அடக்கம்‘ வேறு. ‘அடக்கல்‘ வேறுஆனாலும்இரண்டும் தொடர்புடையவை. ‘அடக்கம்‘ தானே அடங்குவது. ‘அடக்கல்‘ தானே அடங்காமல் அவா எழும்போது அடக்கிக் கொள்தல்.

ஆமை இயல்பாகவே நான்கு கால்களையும் ஒரு தலையையும் உள்ளே – ஓர் ஓட்டிற்குள்ளே வைத்திருத்தல் ‘அடக்கம்’. அடக்காமல் வெளியே நீட்டி ஒரு பகை தோன்றும்போது உள்ளே இழுத்துக் கொள்ளுதல் ‘அடக்கல்.’

இங்குத் திருவள்ளுவர் ‘அடக்கல்’ என்பதை வற்புறுத்துகிறார்.

இக்கால உளவியலில் ‘அடக்கல்’ (Repression) என்பது ஒரு துறை. இதனை ஆராய்ந்தவர் ஆஃச்திரிய நாட்டறிஞர் சிக்மாண்டு பிராய்டு (Sigmund Freud) என்பார். இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் இவர் உளப்பகுப்பியல் (Psycho-analyses) என்னும் ஓர் இயலைப் புதிதாக நிறுவினார். இவ்வாய்வில் ‘அடக்கல்’ ஒன்று, இவர் கருத்தின் படி ‘அடக்கல்’ என்பது பல்வகை மனப்போராட்டங்களால் விளைவது. அவற்றுள் இரண்டை இன்றியமையாதனவாகக் குறிப்பர்.

1. ‘தனியொருவனின் இயல்பான அவாவிற்கும் அவனின் நேர்மையான உணர்ச்சிக்கும் நேரும் மனப் போராட்டத்தால் விளையும் அடக்கல்.’

2. ‘தனியொருவனின் அவாவிற்கும் மக்கள் மரபு பற்றிய எண்ணத்திற்கும் நேரும் மனப்போராட்டத்தால் விளையும் அடக்கல்.’

இவையிரண்டையும் ஆமை உவமையாக்கப்பெற்ற குறளில் காண்கின்றோம்.

1. தனியொருவன் தன் அவா எழும்போது அவனின் உள்ளடக்கமான நேர்மை என்னும் உணர்ச்சி தடுக்கிறது. இரண்டிற்கும் போராட்டம். நேர்மை, அவாவை அடக்கல் செய்கிறது. இது ஆமை இயல்பாகவே அடங்கி இருக்கும் அடக்கல் போன்றது.

2. தனியொருவன் தன் ஐந்து பொறிகளில் எழும் அவாவினை அடக்காமல் எழுப்புவான். அப்போது அவனுக்குள்ளேயே தன்னைச் சூழ்ந்த குமுகாய மரபு என்னும் ஒழுக்க உணர்வு அவாவினைத் தடுக்கும். இரண்டிற்கும் ஒரு போராட்டம் நிகழும். அவன் அவாவைக் குமுகாய மரபு அடக்கும். இது ஆமையின் பார்வையில் தோன்றிய பகையால் உறுப்புக்களை அடக்கல் செய்வது போன்றது.

இவ்வாறாக இக்கால ‘உளப்படுப்பியலைக் குறளில் காண்கின்றோம்.

அடுத்து, “எழுமையும் ஏமாப்பு உடைத்து” (398) என்றதிலும் இன்றைய ‘உளப்படுப்பியல்’ கருத்து பொதித்துள்ளது.

சிக்மாண்டு பிராய்டு.

முதற் பருவமாகிய குழந்தைக்கும் உடலுறவு ஊக்கம் இயல்பாக உண்டு. (இயல்பாகவே இதனை அடக்கலில் கொள்வதால்) இக்குழந்தைக்கு ஆளுமை (Personality)உருவாகும்’ என்று கண்டறிந்தார்.

இவ்வுளப்பகுப்பியலில் ‘அடக்கல்’ ஒருதுறை.

ஐந்தடக்கல ஆற்றின்

எழுமையும் ஏமாப்பு உடைத்து”

என்றதில்,

ஒரு பருவத்தில் அஃதாவது குழந்தைப் பருவத்தில் இயல்பான ‘அடக்கல்’ அமையும். குழந்தையால் இவ்வடக்கல் அறியப்படாதது. இவ்வடக்கலே முதுமை வரை ஏழு பருவத்திற்கும் ஆளுமையாக நிற்கும். ஏழாவது பருவம் வரை இந்த ஆளுமை ஏமாப்பு ஆகும்’

இவ்வாறு பொருள் பொதிந்த இக்குறளால் அக்காலத் திருவள்ளுவரின் இக்கால உளப்பகுப்பியல் அடக்கல்’ புலனாகின்றது. எனவே திருவள்ளுவ உளப்பகுப்பியலாம் ‘அடக்கல்’ ஏமம் ஆகிறது.

அடக்கம் கல்வியாளர்க்கு அமைந்தால் கல்விக்குச் சிறப்பு என்பதை,

கற்று அடக்கல் ஆற்றுவான்” (139) என்பதால் காட்டினார். இவ்வாறு காட்டிய தொடர்பாலும் மேலே கண்ட ‘அடக்கல்’ பற்றிய ஒருமை எழுமை என்னும் தொடர்பாலும் அடுத்துக் கல்வி ஏமத்தைக் காண நேர்கின்றது.

இடையில் ஒருமை, எழுமை பற்றிய ஒரு குறிப்பு. உரையாசிரியர்கள் ஒரு பிறப்பு, ஏழு பிறப்பு என்று பல இடங்களில் பொருள் கொண்டனர். ஏழு பிறப்பு திருவள்ளுவர் ஏற்றதே, ஏழு ஆயினும் அடக்கம், கல்வி பற்றிய கருத்தில் ஒரு (முதல்) பருவம், ஏழு (இறுதி) பருவம் என்று கொள்வதே அறிவார்ந்த பொருளாகும்.

ஏழு பருவங்களாவன :

பெண் : பேதைபெதும்பைமங்கைமடந்தைஅரிவைதெரிவைபேரிளம் பெண்.

ஆண் : சிறுவன், மீனி, மறலோன், திறவோன், காளை, விடலை, முதுமகன்-இவ்வாறு ‘அவிநயம்’ என்னும் பழைய இலக்கணநூல் குறிக்கிறது.

(தொடரும்)

Friday, September 27, 2024

அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 5. ஈ. இன்பம்

 




(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 4 இ. விளைவு-தொடர்ச்சி)


மனத்தின் இயக்க விளைவுதான் உணர்ச்சி.
மனத்தான் ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி” (453) என்றார் திருவள்ளுவர். உணர்ச்சி உடம்பில்-மெய்யில் வெளிப்படுவதை (மெய்யில் படுவதை) ‘மெய்ப்பாடு’ என்றனர் தமிழ்ச் சான்றோர்.
உணர்ச்சி வெளிப்பாடாம் ‘மெய்ப்பாடுகள்’ எட்டு.
நகையே அழுகை இளிவரல் (இழிவு) மருட்கை (வியப்பு)
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டாம் மெய்ப்பாடு என்பு
“[26]
என்றார் தொல்காப்பியர். எட்டுள் இறுதியாகச் சொல்லப் பட்ட உவகைதான் ‘இன்பம்’ எனப்படுவது.
எனவே, இன்பம் என்பது உள்ள நிகழ்ச்சி. இவ்வின்பம் உள்ளத்தில் எழுந்து உடலிலும் உணரப்படும்.
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்
“(1330)
என்றதில் ‘கூடி முயங்கப் பெறும் இன்பம்’ உடலால் நேர்வது. ஊடும் காம இன்பம் உள்ளத்தால் நேர்வது. உடலால் நேர்வதும் உணர்வாக உள்ளத்தால்தான் வெளிப்படும்.
எனவே, எவ்வகையிலும் இன்பம் என்னும் உணர்வு உள்ளத்திற்கு உரியது.
உளவியலை ஆராய்ந்து இக்காலத்தில் காணப்பட்ட முடிவும் இவ்வாறே கூறுகிறது. ஆனால் இவ்வின்பத்தை வெளிப்படுத்தும் உள்ளம் என்பது உடலில் எங்கு இருக்கிறது(?), இருக்கும் இடம் எது(?) என்பதை இன்றைய அறிவியலால் இன்றளவும் காணமுடியவில்லை. திருவள்ளுவர் அதனை வெளிப்படுத்தினார்.
உள்ளத்தைக் குறிக்கத் தமிழில் மனம், நெஞ்சம், (அகம்) எனும் சொற்களும் உள்ளன. இவற்றைத் திருவள்ளுவர் ‘வாய்மை’ அதிகாரத்தில் அடுத்தடுத்து வைத்துள்ளார்.
“தன் நெஞ்சு அறிவது பொய்யற்க” (293)
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின்” (294)
“மனத்தொடு வாய்மை மொழியின்” (295)
“அகம் தூய்மை வாய்மையால்’ (293)

நான்கு சொற்களில் ‘அகம் இடத்தைக் குறிக்கும். அவ்விடம் நெஞ்சம் என்று குறிக்கப்பட்டுள்ளது.
உள்ளம் – உள்ளே அமைந்தது.
மனம் (மன் + அம்) – நிலைத்தது (மன்-நிலைப்பு)
அகத்தே (உள்ளே) மனம் – (உள்ளம்) உள்ளது என்று பொதுவாக இடம் குறித்தார். இடம் என்றால் எந்த உறுப்பு என்னும் இடம் ? அதற்கு விடைதான் ‘நெஞ்சம்’ என்பது. நாம் இப்போது வடமொழியில் குறிக்கும் ‘இதயம்’ என்பதே நெஞ்சம். நெஞ்சில் கைவைத்துச் சொல்’ என்கிறோம். எங்கே கை வைப்பது? மார்பின் மையத்தில் கைவைப்போம். இவ்வழக்கிலும் நெஞ்சம் மார்புப் பகுதியில் அமைந்தது’ என்று அறிகிறோம். தனி உருவின்றி உணர்வே உருவாக நெஞ்சக இயக்கத்தோடு பிணைந்திருக்கிறது. இதன்படி “நெஞ்சம்” என்ற சொல்லை வைத்து உணர்ச்சியைத் தரும் உள்ளம் தெஞ்சகத்தில் உள்ளது என்றார். இன்று காணப்படாத ஒர் உண்மை அன்று திருவள்ளுவரால் ஓர் அதிகாரத்தில் நான்கு சொற்களைப் பெய்து காட்டப்பட்டுள்ளது.
உணர்ச்சிகளில் இன்பம் ஒன்று.
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்
” (628)
என்னும் திருக்குறள் இன்பத்தைப் பற்றிய மூன்று கருத்துக்களைக் கொண்டுள்ளது.
“இன்பம் விருப்பத்தைத் தரும்.
இன்பத்தையே எதிர்பார்த்து இல்லாமல் அதனை விரும்பாதிருக்கவும் வேண்டும்.
இன்பத்திலேயே விருப்பம் கொள்ளாதிருந்தால் துன்பம். வராது” இவை உள்ளத்தால் எழும் உணர்ச்சித் தொடர்புடையவை.
இன்பம் பயக்கும் வினை” (669) என்றதில் இன்பத்தை ஒருவன் “செய்யும் செயல் தரும்” என்று. செயல் தொடர்பு உள்ளது.
மேற்காணப்பட்ட நான்கையும் பொருத்தி நோக்கினால் உடன்பாட்டுப் பொருளாக ‘விரும்பிச் செயலாற்றினால் இன்பம் தோன்றும்’ என்பது கிடைக்கிறது.
பொதுவாக இன்பம் என்றால் முடிவில் மாந்தர்க்குத் தோன்றுவது உடலுறவு இன்பமாக உள்ளது. இதனைச் ‘சிற்றின்பம்’ என்றனர் இடைக்காலத்தார். திருவள்ளுவர்க்கு இது கருத்தன்று. கருத்தாயிருப்பின் ‘காமத்துப் பால்’ பாடிக் காதலினைச் சிறப்பித்திருக்கமாட்டார்.
சிற்றின்பம் வெஃகி (அவாவி) அறணல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்
“(173)
என்னும் திருக்குறளில் உள்ள “சிற்றின்பம்” என்பது. ,சிறிதளவான இன்பம்’, ‘சிறு நேர இன்பம்’ எனப் பல்வகை. அவாவாலும், அவாக்கொண்டு செய்யப்படும் செயல்களாலும் உண்டாகும் உணர்வுகளையே குறிக்கும். காம இன்பத்தை மட்டும் குறிக்காது. மற்றும் “இன்பம் இடையறாது ஈண்டும்” (369) என்றார். இது இன்பம் சிறு அளவிலோ சிறுநேரத்திலோ மட்டுமன்று, தொடர்ந்தும் இருப்பது என்பதையும் குறிக்கிறது. மேலும் “பேரறிவு” (215). “பேராண்மை” (148) என்றெல்லாம் பாடியவர் ‘பேரின்பம்’ என்னும் சொல்லமைப்பையும் காட்டவில்லை.
எனவே, இன்பம் என்பது ஒரு நிலையை மட்டும் குறிப்பதன்று.
தாம் இன்புறுவது உலகு இன்புறக்கண்டு” (239) என்றதால்,
காமுறுவர் கற்றறிந்தார்” (399) என்னும் கல்வி யின்பம் குறிக்கப்பட்டது.
ஈத்துவக்கும் இன்பம்” (228) என்றதால் இல்லாதவர்க்குக் கொடுத்து அவர் மகிழ்வதைப் பார்த்து உவப்பது இன்பமாகிறது.
செறுவார்க்கும் சேண் இகவா இன்பம்” (869) என்றதால் எதிரியின் அச்சத்தால் போரிலும் மற்றவனுக்கு இன்பம் தோன்றுவது குறிக்கப்பட்டது.
“ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம்” (156) என்றதால் பிறரை ஒறுப்ப (தண்டிப்ப) தாலும் இன்பம் தோன்றுவது குறிக்கப்பட்டது.
“இன்பம் பயக்கும் மாசறு காட்சியவர்க்கு” (352) என்றதால் அறிவால் இன்பம் தோன்றுவது குறிக்கப் பட்டது.
இவை போன்று ஒன்றாக,
இன்பம் கூடி முயங்கப் பெறின்” (1330) என்று உடலுறவு இன்பம் குறிக்கப்பட்டது.
இவ்வாறெல்லாம் இன்பத்தை விளக்கும் திருவள்ளுவர் இன்பத்துடன் துன்பத்தைத் தொடர்புபடுத்திப் பாடியுள்ளமை இங்கு நோக்கத்தக்கது.
இன்பம் இடையறா தீண்டும், அவாவென்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்
” (369)

      "இன்பம் விழையான்; இடும்பை இயல்பென்பான்;
      துன்பம் உறுதல் இலன்" (628)

      "இன்பத்துள் இன்பம் விழையாதான், துன்பத்துள்
      துன்பம் உறுதல் இலன்” (629)

      "துன்பம் உறவரினும் செய்க, துணிவாற்றி
      இன்பம் பயக்கும் வினை” (669)

      "இன்பக் கடல் மற்றுக் காமம்; அஃதடுங்கால்
      துன்பம் அதனிற் பெரிது’’ (1166) என்றெல்லாம்

துன்பத்துடன் தொடர்புபடுத்தி இன்பத்தை விளக்கினார். துன்பத்திற்குரிய பிற சொற்களாகிய ‘இடும்பை’ (628) ‘இன்னாமை‘ (630) என்பவற்றையும் உடனமைத்துக் காட்டினார்.
இவ்வாறு இன்பத்தோடு துன்பத்தை இணைப்பதும் இன்பம் பல்வகை உணர்வுகளால் எழுவதும் எனும் கருத்துக்களைக் கருத்தில் நிறுத்தி இக்கால அறிவியலுக்கு வருவோம்.
செருமனி நாட்டு உளவியல் வல்லுநர் உண்டி (Wundi) உணர்ச்சிகளை ஆராய்ந்து உண்மை கண்டவர். அவர் கண்ட கீழ்வரும் உண்மை இங்கு காணத்தக்கது.
“இன்பம், துன்பம், ஊக்கம், ஒய்வு, கிளர்ச்சி, அமைதி என ஆறும் உணர்ச்சிக்கு அடிநிலைகள்” – இவ்வாறு உணர்ச்சியின் அடிநிலைகளைக் கண்டவர் இன்பத்தை அடுத்துத் துன்பத்தை வைத்துள்ளமை திருவள்ளுவத்துடன் ஒப்பு நோக்கத்தக்கது.
திருவள்ளுவர் தம் திருக்குறளில் இன்பத்துடன் துன்பத்தை இணைத்துக் குறித்தமை ஐந்து குறட்பாக் களில் கண்டோம். அவற்றுள்ளும் “இன்பத்துள் இன்பம்” என்றும், “துன்பத்துள் துன்பம்” என்றும் துணுக்கமாகக் கூறியமை இரண்டின் அடிநிலைக் கிளைகள் ஆகும்.
வல்லுநர் உண்டி அவர்கள் ஆறு அடிநிலைகளை, மேலும் ஆய்ந்து ஒரு கருத்தை வெளிப்படுத்தினார் :
“அடிநிலையாகக் கூறப்பட்ட ஆறில்
எவையேனும் மூன்று இணைந்தே
காணப்படும்” என்றார். சான்றாக,

  1. இன்ப ஊக்கக் கிளர்ச்சி
  2. துன்ப ஊக்க அமைதி – எனக் காட்டினார். இவை இரண்டை வைத்துத் திருவள்ளுவத்தைக் காணலாம். இரண்டில் முதலில் உள்ள இன்ப ஊக்கக் கிளர்ச்சியில் இன்பத்துடன் ஊக்கம் தோன்றிக் கிளர்ச்சி உணர்வாகிறது.
    திருவள்ளுவத்தில்,
    “துன்பம் உறவரினும் செய்க, துணிவாற்றி
    இன்பம் பயக்கும் வினை” (669)
    என்னும் குறட்பா
    “இன்பம் பயக்கும் வினை செய்க;
    துன்பம் உறவரினும் செய்க;
    துணிவு ஆற்றிச் செய்க–“
    என அறிவிக்கின்றது.
    இக்குறளில் எடுத்துக் கொள்ளப்பட்டது இன்பம். அதனைத் துணிவு ஆற்றி என்றது, நெஞ்சத்துணிவைத் துண்டுவதாகிய ஊக்கத்தைக் குறிக்கும். நெஞ்சத் துணிவால் எழுந்த ஊக்கத்துடன் செய்க என்றது, இன்ப ஊக்கத்தில் கிளர்ச்சியால் நேர்வது. எனவே, வள்ளுவர் குறள், உளவியல் வல்லுநர் அடிநிலை விளக்கத்தைப் பின் வருமாறு குறித்துக் காட்டுவதாகிறது.

வள்ளுவர் : வல்லுநர் :
இன்பம் பயக்கும் : இன்ப
துணிவு ஆற்றி : ஊக்க
செய்க : கிளர்ச்சி


இது போன்றே வல்லுநர் காட்டிய ‘துன்ப ஊக்க அமைதி’யை வள்ளுவக் குறள்
இன்பம் விழையான், இடும்பை இயல்பென்பான்
துன்பம் துடைத்துான்றும் தூண்
” (628)
என்பது காட்டியது. இக்குறளில் துன்பத்தைப் போக்கும் உறுதிப்பாடு கூறப்பட்டது.
துன்பம்,
அஃது ‘இடும்பை இயல்பென்று கொண்டு உள்ளத்தின் ஊக்கத்தால்
துடைக்கப்படுவது;
துடைக்கப்பட்டதைக் கலக்கமில்லாத உறுதித்தூணில் வைப்பது’-என மூன்று கருத்துகள் உள்ளன. இவை “உளவிய அறிவிய”லில் பொருந்துகின்றன.
வள்ளுவர் வல்லுநர்
துன்பம் : துன்ப
(மன ஊக்கத்தால்) துடைத்து : ஊக்க
இடைவளிமண்டிலம் (Microsphere) : ஊக்க
ஊன்றும் தூண் : அமைதி

18ஆம் நூற்றாண்டளவில் ஆய்ந்து காணப்பட்ட இன்ப துன்ப விரிவுகள் திருவள்ளுவத்தில் முறையே ஒவ்வொரு குறளில் அமைந்தவையாகின்றன. திருவள்ளுவம் ஓர் உளவியல் அறிவியலில்தன் பங்களிப்பை வைத்துள்ளமைக்கு இஃதொரு சான்று.
இன்பம் சீர்குலையாமல் அமைய வேண்டும். அதற்கு இடையூறு வராமல் பாதுகாப்பு வேண்டும். அப்பாது காப்பாம் ‘ஏமம்’ இன்றியமையாதது.

(தொடரும்)