Tuesday, October 4, 2022

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 447-452

 அகரமுதல




(தமிழ்ச்சொல்லாக்கம்: 437-446 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 447-452

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

447.  Scientific culture – சாத்திரக்கல்வி

448. Fine Arts – நற்கலை

மநோபிவிர்த்தியினுக்குப் பிரதான சாதனங்களாயுள்ளன முறைப்பட்ட சாத்திரக்கல்வி (Scientific culture)யும் இலக்கியப்பயிற்சியும், நற்கலைத் (Fine Arts) தேர்ச்சியுமேயாம்.

நூல்      :           தமிழ் வியாசங்கள் (1922) பக்கம் -8

நூலாசிரியர்      :           வி.கோ. சூரியநாராயண சாத்திரியார், பி.ஏ.,

449. Foot-Ball – உதைப் பந்தாட்டம்

450. Tennis – சல்லடைப் பந்தாட்டம்

451. Cricket – மரச்சட்டப் பந்தாட்டம்

வேலை செய்ய வேண்டாதவன் உடல்விருத்தி விளையாட்டுக்களாகிய உதை பந்தாட்டம் (Foot-Bail), சல்லடைப் பந்தாட்டம் (Tennis), மரச் சட்டப் பந்தாட்டம் (Cricket) முதலியனவாதல் ஆடல் வேண்டும்.

நூல்      :           தமிழ் வியாசங்கள் (1922) பக்கம் – 7

நூலாசிரியர்      :           வி.கோ. சூரியநாராயண சாத்திரியார், பி.ஏ.,

திரு. அ. சுப்பிரமணிய பாரதி

செந்திலாண்டவன் திருவடி துணை

மார்க்கண்டேயர்

வரகவி. திரு. அ. சுப்பிரமண்ய பாரதி இயற்றியது.

ப. ராமா அண்டு கம்பெனி, திருவல்லிக்கேணி, சென்னை (1923)

452. Mount Road – மலைச் சாலை

திருக்குறள் வீட்டின்பால் – இது பதினான்கு சைவ சித்தாந்த நூல்கட்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பும் விரிவுரையும் ஆக்கியோராகிய திரு. சே.எம். நல்லசாமி பிள்ளை பீ.ஏ. பி.எல், அவர்களால் எழுதப்பட்டது. மலர் -2 பல்கலைக்கழகப் பதிப்பு நிலையம், மலைச்சாலை, சென்னை. 1923, விலை அணா இரண்டு.

நூல்      :           திருக்குறள் வீட்டின் பால் – முதற் பதிப்பு (1923) பக்கம் -1

நூலாசிரியர்      :           சே.எம். நல்லசாமி பிள்ளை, பீ.ஏ., பி.எல்.

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Sunday, October 2, 2022

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 437-446

 அகரமுதல








(தமிழ்ச்சொல்லாக்கம்: 430-436 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 437-446

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

437. அபிவிருத்தி         –           மேம்பாடு

438. புண்ணியம்         –           நல்வினை

439. பராக்கிரமம்        –           வல்லமை

440. அனுமதி  –           கட்டளை

441. வித்தியாசம்         –           வேற்றுமை

442. சம்மதித்தல்         –           உடன்படல்

443. ஆடம்பரம்          –           பெருமை

444. திடீரென்று          –           தற்செயலாய்

445. அதிசயம் –           விந்தை

446 கர்வம்      –           செருக்கு

நூல்      :           சீவகன் சரிதை (1922)

நூலாசிரியர்      :           ஆ.வீ. கன்னைய நாயுடு

(சென்னைப் பச்சையப்பன் கலாசாலைத் தமிழ்ப் பண்டிதர்)

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Friday, September 30, 2022

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 430-436

 அகரமுதல




(தமிழ்ச்சொல்லாக்கம்: 426 – 429 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 430-436

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

430. Biology – உயிர் நூல்

431. பிராணதாரணப் பிரயத்தனம் – Struggle For Existence

‘போதுமான மட்டுஞ் சுறுசுறுப்பாயிருப்பவனே பிராணதாரணப் பிரயத்தனத்தில் (Struggle For Existence) ஒழிந்துவிடாது தங்கி நிற்பான்’ என்று உயிர் நூல் (Biology) முறையிடுகின்றது.

நூல்   :           நூல் தமிழ் வியாசங்கள் (1922) பக்கம் -6

நூலாசிரியர்         :           வி.கோ. சூரியநாராயண சாத்திரியார், பி.ஏ., (சென்னைக் கிறித்தவ கலாசாலை முன்னாள் தலைமைத் தமிழ்ப் பண்டிதர்)

432. Psychology – உளநூல்

433. Political Economy – செல்வ நூல்

434. மனித நூல் – Anthropology

ஈண்டுக் குறித்த நூல் என்பது உயிர்நூல். உளநூல் (Psy- chology) மனித நூல் (Anthropology) ஒழுக்க நூல், செல்வநூல் (Political Economy) பெவுமிய நூல் (Geology) முதலியவற்றின் பொதுப்பெயர்.

நூல்   :           தமிழ் வியாசங்கள்

நூலாசிரியர்         :           வி.கோ. சூரியநாராயண சாத்திரியார், பி.ஏ.,

435, 436 முன்னடை, பின்னடை

எம்.ஏ. வரதராச பிள்ளை, பி.ஏ.பி.எல், எப்.டி.எசு. எல்லாருக்கும் பொதுவாக உரிமையான, ‘சிரீமான்’ என்னும் முன்னடையும், அவர்கள் என்னும் பின்னடையும் இல்லாமலே தமது பெயர் கிட்டத் தட்ட ஒரு சாண் இருந்தது. வக்கீல் அதைப் பார்த்து மனம் பூரித்தார்.

நூல்      :           சதானந்தர் (ஓர் அரிய தமிழ் நாவல்) (1922) அதிகாரம் – 2 – பித்தோ பேயோ, பக்கம் – 38

நாவலாசிரியர்  :           நாகை சொ. தண்டபாணிப் பிள்ளை

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Wednesday, September 28, 2022

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 426 – 429

 அகரமுதல





(தமிழ்ச்சொல்லாக்கம்: 421-425 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 429-429

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

426. Mathematics professor – கணித நூற்புலவர்

அக்காலத்தில் சென்னை பிரஸிடென்சி காலேசில் மாத மெடிக் புரொபெசராக (கணித நூற்புலவர்) இருந்து காலஞ்சென்ற இராயபகதூர் பூண்டி அரங்கநாத முதலியாதொருவர்தான், இவ்வாசிரியர் சிவபதம் பெற்றதும், இவரது சேசுட்டக் குமாரனாகிய அடியேனுக்குத் தாம் மேற்பார்த்து வந்த தமிழ் டிரான்சி லேட்டர் ஆபீசில் உத்தியோகஞ் செய்வித்து, அதன் மூலமாய் எமது குடும்பத்தைத் தமது நண்பரைப் போல் பாவித்துக் காப்பாற்றினவர். அந்நன்றி யென்றும் மறக்கற்பாலதன்று.

நூல்   :           சிரீ சங்கர விசயம் (1921), 3ஆவது பதிப்பு பக். 14

முகவுரை    :           தொழுவூர் வே. திருநாகேசுவரன்

(தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்களின் புதல்வர்

427. நமோ, நம – வணக்கம்

நமோ, நம என்பவை மந்திரங்களி னீற்றில் வணக்கத்தை யுணர்த்தற்பொருட்டு, வருஞ்சொற்கள்; இவற்றிற்கு ‘வணக்கஞ் செய்கிறேன்’, ‘நமசுகரிக்கின்றேன்’ என்பன பொருள்களாம்.

நூல்   :           கந்தர் சசுட்டிக் கவசம் மூலமும் உரையும் (1921 பக்கம் 24)

நூலாசிரியர்         :           மதுரை சில்லா, செம்பூர் – வித்துவான் வீ. ஆறுமுகஞ் சேர்வை

428. Station Master – தங்கு நிலையத்தவர் (1922)

டி. எம். அச்சுக்கூடம்

ஓம்

பல்லாவரம், 23.1.1922

அன்பிற்கோர் உறையுளாய்த் திகழும் திருவாளர் வே. நாகலிங்கம் பிள்ளையவர்கட்குச் சிவபெருமான் திருவருளால் எல்லா நலன்களும் உண்டாகுக!

தங்கள் அன்பின் திறத்தாலும் திருவருள் வலத்தாலும் பையனும் நானும் நலமே இங்கு வந்து சேர்ந்தோம். வரும்போது தனுக்கோடித் தங்கு நிலையத்தவர் (Station Master) வேண்டுகோளுக்கிணங்க அங்கே, ‘தமிழரின் கடவுள் நிலை’ என்பதைப் பற்றி ஒரு விரிவுரை நிகழ்த்தினேன். அதனை ஆரியப் பார்ப்பனர் பலரும் வந்து கேட்டனராயினும், எவருங் குறை சொல்லாமல் மகிழ்ந்து வியந்தனர்.

அன்புள்ள

மறைமலைமடிகள்

நூல்   :           மறைமலையடிகள் (1951) பக்கம் 211.

நூலாசிரியர்         :           புலவர் அரசு

429. Hammock – வலையேணி

அப்பொழுதுதான் கனகவல்லி பாட்டை முடித்தாள். மாடியின் நடுவே, இரண்டு மரத்துண்டுகளிடையே கட்டப்பட்டிருந்த வலையேணி (Hammock) ஒன்றில் அவள் படுத்திருந்தாள். கடுமையும் செம்மையும் கலந்த அவ்வலையேணியில், ஒல்லியும் உயரமுமான அப் பொன்மேனிப் பாவை நல்லாள் வெண்சிவப்புப் பட்டாடை யுடுத்துப் படுத்திருந்த காட்சி, நீல வானத்திடையே மின்னற்கொடி யொன்று நிலையாய்க் கிடப்பதுபோலிருந்தது. –

நூல்   :           சதானந்தர் (ஒர் அரிய தமிழ் நாவல்) (1922) அதிகாரம் -4 துறவியின் துறவு, பட்சகம் -79

நூலாசிரியர்         :           நாகை சொ. தண்டபாணிப் பிள்ளை

(மறைமலையடிகள் மாணவர்)

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Monday, September 26, 2022

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 421-425

 அகரமுதல




(தமிழ்ச்சொல்லாக்கம்: 417-420 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 421-425

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

421. Cinema – படக்காட்சி

இவ்வழகிய நகரத்தில் நானாவித வியாபாரத் தலங்களும், கைத்தொழிற் சாலைகளும், நீதிமன்றங்களும், உயர்தரக் கலாசாலைகளும், நாடக மேடைகளும்; சினிமா (படக்காட்சி) நிலையங்களும், கண்காட்சித் தோட்டங்களும், கடற்றுறைமுக வசதிகளும், மற்றும் மக்கள் தத்தம் மனதிற் கேற்றவாறு களிப்பூட்டும் விநோத விசித்திரங்களும், இன்னும் பல்வேறு செளகரியங்களும் ஒருங்கே அமைந்திருப்பதால் பற்பல தேயத்தினரும் இச்சென்னை மாநகரை வாழத்தானமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றார்கள்.

நூல்   :           குடியால் கெட்ட குடும்பம் (1921). பக்கம் – 4

நூலாசிரியர்         :           ‘தமிழ் நாவலர்’ எசு.கே. கோவிந்தசாமிப் பிள்ளை.

422. சகப்பாங்கு   –           உலகநடை

423. அன்னமயம்  –           சோற்றுருவம்

424. சலதாரை       –           சாக்கடை

நூல்   :           சின்மயதீபிகை (1921)

நூலாசிரியர்         :           முத்தைய சுவாமிகள், குமாரதேவராதீனம்

விருத்தியுரை       :           காஞ்சிபுரம் இராமாநந்த யோகிகள்

425. பாலசுப்பிரமணி(ய  முதலியார், ம.பி.ஏ.,பி.எல்.)

– இளமுருகனார் (1921)

இவர் 1944இல் பள்ளத்தூரிலும், 1948இல் யாழ்ப்பாணத்திலும் சைவ சித்தாந்த சமாச ஆண்டு விழாக்களில் தலைமை வகித்தவர். சமாசச் செயலாளராக (1921-1943) 22 ஆண்டுகள் தொடர்ந்து தொண்டாற்றியவர்.

சைவ சித்தாந்த மகா சமாசம் பொன் விழா மலர்

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Saturday, September 24, 2022

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 417-420







(தமிழ்ச்சொல்லாக்கம்: 411-416 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 417-420 

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

417. தரித்திரர்       –          இல்லார்

418. காந்தன்          –          நாயகன்

419. அந்தரியாக பூசை –          உட்பூசை

நூல்   :           அட்டரங்க யோகக்குறள் வருத்தமற வுய்யும் வழி (1923)

பரிசோதித்தவர்  :           சேரா. சுப்பிரமணியக் கவிராயர்

(திருவாவடுதுறை ஆதீன வித்துவான்)

420. விவாக முகூர்த்தப் பத்திரிகை – மண இதழ்

(1524)

நாட்கள் உருண்டோடின. நம் பேராசிரியர் (மயிலை சிவமுத்து) முப்பத்திரண்டாம் அகவையைக் கடந்து முப்பத்து மூன்றாம் அகவையைக் கண்டார். அப்போது அவருக்குத் திருமணம் செய்வது பற்றி பேச்சு எழுந்தது. நம் பேராசிரியரின் ஆசிரியராகிய மணி. திருநாவுக்கரசு முதலியார் அவர்களால் மண இதழ் என்னும் தலைப்போடு திருமண அழைப்பிதழ் எழுதப் பெற்றது. நம் பேராசிரியர் 10.9.1924 இல் உற்றார் உறவினர் அனைவரும் மனங்களிக்கப் பேராசிரியர் மணி திருநாவுக்கரசு முதலியார் அவர்கள்.

எண் குணத்து முத்தாய் எழிலிற் குமரனாய்

வண்தமிழிற் சாமியாய் வாழ்காளை – பெண்குணத்து

மங்கையர்க்குப் பேரரசாம் மானுடனே பல்லாண்டு

மங்கலமாய் வாழ்க மகிழ்ந்து.

என மனமகிழ்ந்து வாழ்த்த மங்கையர்க்கரசியார் என்னும் அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார். தமிழ்நெறிக் காவலர் பேராசிரியர் மயிலை சிவமுத்து நினைவு மலர். மாணவர் மன்ற வெளியீடு, சென்னை.

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Thursday, September 22, 2022

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 411-416

 

அகரமுதல





(தமிழ்ச்சொல்லாக்கம்: 408-410 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 411-416

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

411. கீர்த்தனை – பாட்டு

கீர்த்தனை என்பது வடமொழிச் சொல்லாயினும் தமிழில் பாட்டென்னுஞ் சொல்லோடு வேற்றுமையின்றிப் பயின்று தொன்றுதொட்டு வழங்கி வருகிறது. பாட்டென்னுஞ் தமிழ்ச் சொல்லோ இசைத் தமிழின் பாகுபாட்டையுணர்த்தும் தேவபாணி என்பது முன்னோர் ஆட்சி.

நூல்   :           பரமானந்தப் பக்திரசக் கீர்த்தனை (1920) முகவுரை – பக்கம் – 5

நூலாசிரியர்   :  தூத்துக்குடி டி.டி. சங்கரதாசு சுவாமிகள் (தமிழ்நாடகத் தலைமை நாடகாசிரியர்)

412. பாலசுந்தரம் – இளவழகனார் (1920)

குருகுலம் அழகரடிகளார்

வாழ்க்கைக் குறிப்புக்கள்

பிறந்த ஊர்      :   மதுராந்தகத்தை அடுத்த மாம்பாக்கம்

ஆண்டு        :    1904 ஏப்பிரல்

பெற்றோர்  :    சுப்பராய பிள்ளை திரு. மாணிக்கம்மாள்

மரபு  :      வள்ளலாரைத் தோற்றுவித்த ‘சீர் சுருணிகர்’

பெயர்    :  பெற்றோரால் அமைந்த பெயர் பாலசுந்தரம்; ஆசிரியரால் அமைந்த பெயர் இளவழகனார்; தீக்கையால் அமைந்த பெயர் அழகரடிகள்.

1920.16 ஆம் வயதில் தமிழ்க் கடல் மறைமலையடிகளார்க்கு மாணவர்

நூல்   :   குருகுலம் – திருக்குறள் பீடம், அழகரடிகள் வாழ்க்கை வரலாறு

நூலாசிரியர்    :   த.ஆறுமுகம் பக்.53, 54.

413. ஞானவாசகம் – அருட்பா

414. சித்தவிருத்தி – நெஞ்சிற் பரப்பு

நூல்   :   திருவாதவூரடிகள் புராணம் (1923) (கடவுள்மாமுனிவர்)

குறிப்புரை :   பிரசங்க பாநு கா. இராசாராம் பிள்ளை

415. ஞான சாகரம் – அறிவுக் கடல் (1923)

416. பதுமம் – திருமலர்

“ஞான சாகரம்” (1902) இதுவே பின்னர் அறிவுக் கடல் எனத் தனித் தமிழ்ப் பெயர் சூட்டப்பட்டது! ஆசிரியர் நாகை வேதாசலம் பிள்ளை எனும் மறைமலையடிகளாவர். ஞான சாகரம் முதலிய தனது பெயருக்குத் தகுந்தாற் போல் பதுமம் – 1, இதழ் – 1 என்று வெளிவந்தது. பின்னர் 1923 இல் அறிவுக் கடலாகப் பெயர் மாற்றப்பட்ட பின்பு திருமலர், இதழ் என்று வெளிவரலாயிற்று.

நூல்   :     தமிழ் இதழியல் வரலாறு (1977) பக்கங்கள் 50, 61

ஆசிரியர்    :    மா. சு. சம்பந்தன்

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்