Monday, November 27, 2023

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 949-968

 





(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 941- 948 – தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 949-968

(கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

  1. பேடின் – வளர்பிறை
  2. லாங் அல்லது சுலோ பேடின் – நீள் வளர் பிறை
  3. பேடவுட் – தேய்பிறை
  4. லாங் பேடவுட் – நீள தேய்பிறை
  5. டிசால்வ் – தேய் வளர்பிறை
  6. வைப் – துடைப்பு
  7. கட் – வெட்டு
  8. ஐரிசு இன் – உட் சுழல்
  9. ஐரிசு அவுட் – வெளிச்சுழல்
  10. சூபர் இம்போசு – அடுக்குக் காட்சி
  11. மல்டிபிள் எக்சுபோசர் – அடுக்குத் தூக்கு
  12. டிசுடண்ட் சாட் – நெடுந் தொலைவுக் காட்சி
  13. லாங் சாட் – தொலைவுக் காட்சி
  14. பிக்ளோசு அப் – நுண்ணணி
  15. க்ளோசு அப் – அண்மைக் காட்சி
  16. டாப் சாட் – முடிநேர்க் காட்சி
  17. ஃச்ட்ரெய்ட் சாட் – நேர்க் காட்சி
  18. ட்ரக் சாட் – கருவிப் பாய்ப்பு
  19. க்ரேன் சாட் – தூக்கிப் பாய்ப்பு
  20. மாசுக் சாட் – மறைப்புக் காட்சி
    இதழ் : குண்டூசி, நவம்பர் 1947, பக்கம் : 14, பட்டை – 1, ஊசி – 2
    கட்டுரையாளர் : பாலபாரதி சது. சு. யோகியார்

(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்


Monday, November 20, 2023

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 941- 948

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 931- 940 தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 

941- 948

(கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

  1. Profiles – பக்கப் பார்வைப் படங்கள்
    இந்த நாகரிகமற்ற காட்டு மனிதர்களுக்குப் படம் வரையத் தெரிந்திருந்தது. ஆனால் காகிதத்தாள்களாவது எழுதுகோலாவது மைதீட்டும் கருவியாவது அக்காலத்தில் இருக்கவில்லை. கல் ஊசிகளும் கூர்மையான கருவிகளுமே அவர்களிடம் இருந்தன. இவற்றைக் கொண்டு குகைகளின் சுவர்களில் அவர்கள் மிருகங்களின் உருவங்களைக் கீறி வரைந்தார்கள். அவர்கள் எழுதியுள்ள சித்திரங்களில் சில மிகவும் நன்றாயிருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் பக்கப் பார்வைப் படங்கள் (Profiles). பக்கப் பார்வைப் படங்களை வரைவது எளிது என்று உனக்குத் தெரியும்.
    நூல் : சவாகர்லால் நேருவின் கடிதங்கள் (1944)
    ⁠பக்கங்கள் -43, 44
    மொழிபெயர்ப்பு : சி. இரா. வேங்கடராமன், பி.ஏ. பி.எல்,
    ⁠(இந்திய ஊழியர் சங்கம்)
  2. வாக்கியம் – சொற்றொடர்
    இராமன் பாடம் படிக்கிறான்
    சீதை கோலம் போடுகிறாள்
    பசு பால் தரும்
    நாய் வீட்டைக் காக்கும்.
    இவ்வாறு பல சொற்கள் தொடராகச் சேர்ந்த சொற்றொடரால் (வாக்கியத்தால்) ஒரு கருத்தினைப் பிறருக்கு அறிவிக்கின்றோம்.
    நூல் : சிறுவர் தமிழிலக்கணம் (1945)
    பக்கம் – 5
    நூலாசிரியர் : வே. வேங்கடராசுலு ரெட்டியார்
  3. கிளாரினெட் – கிளரியம்
    இஃது ஐரோப்பியத் துளைக்கருவிகளுள் ஒன்று. இப்போது இது தஞ்சாவூர்க் கூட்டியத்தில் (பாண்டில்) இடம் பெற்றுள்ளது. இதைச் சதிர்க் கச்சேரிகளில் வாசிக்கப்படும் சின்ன மேளத்தில், குழலுக்கும் முக வீணைக்கும் பதிலாக முதன்முதலாக நுழைத்தவர் மகாதேவ நட்டுவனார் ஆவார்.
    நூல் : தமிழர் இசைக் கருவிகள் (1945), பக்கம் – 50
    நூலாசிரியர் : பி. கோதண்டராமன்
  4. சாயாசரீரம் – நிழலுடல்
    நூல் : பஞ்சாக்கர தேசிகர் அந்தாதி (1945) பக்கம் . 8
    குறிப்புரை : வி. சிதம்பர இராமலிங்க பிள்ளை
    ⁠(திருவாவடுதுறை ஆதீன வித்துவான்)
  5. Band – கூட்டியம்
    ஐரோப்பிய இசையின் தொடர்பினால் தமிழ்நாட்டு இசையில் ஏற்பட்ட நவீனங்களில் பாண்டு (கூட்டியம்) என்பதும் ஒன்று. சென்ற நூற்றாண்டில், தஞ்சாவூர் சமத்தானத்தில், மரத்தாலும், பித்தளையாலும் ஆன இசைக் கருவிகளைக் கொண்டு ஒழுங்காக அமைக்கப்பட்ட முதல் பாண்டு, கருநாடக இசை முறையில் வாசிக்கப்பெற்றது.
    நூல் : தமிழர் இசைக் கருவிகள் (1945), பக்கம் – 62
    நூலாசிரியர் : பி. கோதண்டராமன்
  6. Universe – உலகத் தொகுதி
    தருக்கையுடைய மனத்தவர்களே ! நீங்கள் போய் விடுங்கள்; மெய்யடியார்களே! விரைவாக வாருங்கள் அடியார் கூட்டத்தில் சேர்ந்து, இறைவன் சம்பந்தமான பிறருடைய அநுபவங்களைக் கேட்டும் தம்முடைய அநுபவங்களைப் பிறருக்குச் சொல்லியும் பரம்பரையாக ஈசனுக்கு அடிமைப் பணி செய்யுங்கள். உலகத் தொகுதியையும் கடந்த அப்பாற்பட்ட பொருள், அளவுகடந்த ஆனந்த வெள்ளமாயிருக்கும் அல்லது ஆனந்த வெள்ளத்தைத் தரும் பொருள், முன்னும், இப்போதும், எக்காலத்தும் (அழியாது) உள்ள பொருளென்றே சிவபெருமானுக்குப் பல்லாண்டு கூறுகின்றோம்.
    நூல் : சைவ சமய விளக்கம் (1946), பக்கம் – 51
    நூலாசிரியர் : அ. சோமசுந்தர செட்டியார்
    ⁠(சேக்கிழார் திருப்பணிக் கழகத் தலைவர்)
  7. Vacuum – பாழ்
    வாய் திறந்து பகவானைப் பேரிட்டழையாமல் மனத்தால் தியானிப்பவர்களும் அவரைக் (பகவானை) குதா என்னும் நாமத்தால் ஒசைபடாமல் சொல்லி, ஏதாவதொரு வடிவத்தாலேயே தியானிப்பார்கள். அவரை ஏதேனுமொரு பாவனையினாலன்றி தியானித்தல் எளிதன்று. அவரை ஆகாயமாகவாவது தியானித்தே தீர வேண்டும். ஆகாயமும் ஒரு பொருளே அன்றி வெறும் பாழ் அல்ல. முப்பாழும் பாழாய் முடிவிலொரு சூனியமாம், அப்பாலும் பாழென்றறி என்றபடி பகவானைப் பாழ் என்றாலும் அவர்க்கு நாமம் ஏற்படுகிறது. எப்போது நாமம் ஏற்படுகிறதோ, அப்போது உரூபமும் ஏற்படாமல் இராது.
    நூல் : கபீர்தாசு (1945), பக்கம் : 9, 10
    நூலாசிரியர் : பண்டிதர் ம. மாணிக்க வாசகம் பிள்ளை

  1. எலினேரியோ – காட்சிக் கோப்பு
    ‘லினேரியோ’ என்பது ஒரு ஆங்கிலச் சொல். தமிழில் அதன் பிரதி பதம் ‘காட்சிக் கோப்பு’.
    இப்பதம் திரைப்படத்திற்கும்(சினிமாவுக்கும்) சரி, நாடகத்திற்கும்(டிராமாவுக்கும்) சரி – பொதுவானது.
    இதழ் : குண்டுசி, நவம்பர் 1947, பக்கம் :12, பட்டை – 1, ஊசி – 2
    கட்டுரையாளர் : பாலபாரதி ச. து. சு. யோகியார்

(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்

Monday, November 13, 2023

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 931- 940

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 916- 930 – தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 

931- 940

(கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார்.238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளனமொழிமாற்றச் சொல்லும்சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

931- Executive Officer – ஆணையாளர்

தற்காலம் செங்கோட்டை மிட்டாதார், திரு. எம். சுப்பிரமணியக் கரையாளர் ஆட்சித் தரும கருத்தராயும், தென்காசி, வக்கீல், திரு. டி.எசு சங்கரநாராயண பிள்ளை பி.ஏ., பி.எல், அட்வகேட் திரு. ஏ.சி. சண்முக நயினார் பிள்ளை பி.ஏ., பி.எல், தரும கருத்தர்களாயும் நியமிக்கப்பட்டு நிருவாகம் நடத்தி வருகின்றனர். மாதச் சம்பளம் உரூபாய் 200 வரை பெறும் ஓர் ஆணையாளரையும் (Executive Officer) நியமிக்கின்றனர். இப்போதுள்ள ஆணையாளர் திருவாளர் கே.வி. சுப்பையாப் பிள்ளையவர்கள் B.A.,

நூல் : திருக்குற்றாலத் தலவரலாறு (1943), பக்கம் – 60

932. நாராயணசாமி – திருமால் அடிகள் (1943)

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நானும் நெடுஞ்செழியனும் ஒன்றாகப் படித்தோம். அந்தக் காலத்தில் நெடுஞ்செழியனுக்குப் பேசும்போது நாக்கு புரளக் கடினப்படும்.

அந்த நாக்குச் சரியாகக் கூழாங்கற்களை வாயில் அடக்கியபடி 6 மாதம் பயிற்சி பெற்றார். தினமும் பேசிப் பேசிப் பழகுவார். அந்த நாத் தடு மாற்றம் மாறியது. சிறந்த பேச்சாளர் ஆனார்.

நாராயணசாமி என்ற பெயரை முதலில் திருமால் அடிகள் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார். அப்படி மூன்று மாதங்கள் இருந்தார். இது என்ன திருமாலுக்கு அடிகள் என்று கேட்டேன். பிறகு அவர் பட்டுக்கோட்டை போய்விட்டுத் திரும்பும்போது நெடுஞ்செழியன் என்ற பெயரோடு வந்தார்.

இதழ் : நவமணி, 13.7.1970

933. முருகு. சுப்பிரமணியன்

ஆசிரியர் முருகுவின் எழுத்துலகம் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் துவங்கியது என்று சொல்லலாம்.

திருச்சி அர்ச். சூசையப்பர் உயர்நிலைப் பள்ளியில் 1939 ஆம் ஆண்டு ஐந்தாம் படிவத்தில் படித்துக் கொண்டிருந்தபோது திரு. முருகுவின் கட்டுரை ஒன்றைத் தமிழாசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை வகுப்பில் படித்துக் காட்டி கட்டுரை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அழுத்தமாகச் சொன்னார்.

1942ல் படிப்பு, முதல் பல்கலைக்கழக வகுப்போடு முடிந்தது. படிப்பு முடியுமுன்னர் திருச்சியிலேயே இளந்தமிழன் என்னும் திங்களிருமுறை ஏட்டைத் துவக்கினார்.

இளந்தமிழனில் முருகு என்னும் புனைபெயரில் எழுதி வந்ததோடு, இளந்தமிழன் ஆசிரியர் முருகு என்னும் பெயரிலேயே வந்தது. அதுவே பிறகு பெயருக்கு முன்னால் சேர்ந்து முருகு சுப்பிரமணியன் என்றாகிவிட்டது.

நூல்        :               தமிழ்க்காவலர் முருகு சுப்பிரமணியன்

                                ⁠பொன்விழா மலர் (1976), பக்கம் – 36, 37

தொகுப்பு            :               பரிதா மணாளன்

934. பிரயோசனம்              –              பயன்

935. பார்யை         –              மனைவி

936. சுவரம்           –              காய்ச்சல்

937. புருசன்        –              கணவன்

938. இரெங்கசாமி- அரங்கண்ணல் (1943)

25 ஆண்டுகளுக்கு முன்பு! ‘கிளம்பிற்றுக் காண் தமிழ்ச் சிங்கக் கூட்டம்! கிழித்தெறியத் தேடுதுகாண்பகைக் கூட்டத்தை’ என்று பாரதிதாசனார் பாராட்டிய திருவாரூரில், ஒரு தமிழ்க் குகை, மா. வெண்கோ எனும் புனைபெயருக்குள் தன்னை மறைத்துக் கொண்ட வயலூர் சண்முகம், திருக்குவளை கருணாநிதி, கோமல் இரங்கசாமி, திருவாரூர் சாமா, விசயபுரம் செல்லக் கணபதி, குளக்கரை சீனுவாசன்… அடிக்கடி இந்த மாணவப் பட்டாளம் அந்தக் ‘குகை’க்குள் கூடும். திருக்குவளை கருணாநிதி வேலையிருந்தால்தான் வருவார். அவர் தவிர மற்ற நாங்கள் எல்லாம் ஒரு கூட்டம். தமிழ் மீது எங்களுக்கு ஓர் ஆசை.

எனது மாணவ ஆசான் வ. கோ. சண்முகம் ஓர் அவைக் கோழை! மிராசு வீட்டுப் பிள்ளை எனும் நினைப்பும் வசதியான வாழ்வும் அவருக்கு அப்போது அமையாதிருந்தால் இன்று அவர் கவிஞர்களில் கவிஞராகவோ அல்லது இன்னொரு கருணாநிதியாகவோ இருந்திருக்கலாம். சிறந்த தமிழ்த் தும்பீ! அவருடைய வீடுதான் எங்கள் குகை. கோமல் இரங்கசாமியான என்னை அரங்கண்ணல் ஆக்கியது அவர்தான்.

இராம. அரங்கண்ணல், எம்.எல்.ஏ., சுரதா பொங்கல் மலர் – 1970

939. Bus – நெய்யாவி ஊர்தி

நெய்யாவி ஊர்தியிலே (பொருள் தெரியாவிட்டால் நீச பாசையிலுள்ள பஃச் என்ற திசைச் சொல்லை உபயோகித்துக் கொள்ளவும்) பிரயாணம் செய்து கொண்டிருந்த, ஒரு சகோதரி வேடிக்கையாக ஒன்றைச் சொல்ல, அதைக் கேட்ட மற்றப் பிரயாணிகள் கொல் என்று சிரித்தார்கள்.

நூல்        :               அசோகவனம் (1944), பக்கம் -92

நூலாசிரியர்         :               எ. முத்துசிவன்

940. Bangalow – தங்கிடம்

பொருநையாறு இம்மலைமிசைத் தோன்றிக் கீழ் நோக்கி ஓடி வருகிறது. இது தோன்றும் இடம் சதுப்பு நிலமாக எப்போதும் தண்ணீர் ஊறிக் கொண்டே இருக்கிறது. இது சிறிது தூரம் வந்தவுடன் கன்னிகட்டி என்ற ஓரிடம் இருக்கிறது. அவ்விடம் மரச் செறிவுள்ளதாய்ப் பேரழகினதாய் விளங்குகின்றது. இங்கே தங்கிடம் ஒன்றிருக்கிறது.

நூல்        :               பாவநாசம் பாவநாச சரி கோவில் வரலாறு (1944), பக். 5

நூலாசிரியர்         :  இ. மு. சுப்பிரமணியபிள்ளை, தலைமைத் தமிழாசிரியர்,

                                நாட்டாண்மை உயர்ப்பள்ளிக்கூடம், சங்கரன் கோவில்.

(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்

Monday, November 6, 2023

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 916- 930

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 911-915-தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 916- 930

(கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார்.238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

916. Assignment Card – குறிப்புத்தாள் அட்டை

917. Assignment Chart – குறிப்பு விளக்க அட்டை

பாடசாலை வேலை யாவற்றையும் தனிப்பயிற்சி மூலம் நடத்த முடியாது. போனாலும், வேலையின் பெரும் பாகத்தை இம்முறையின் மூலம் நடத்தலாம். தனிப்பயிற்சி வேலையின் திறமையான பகுதி குறிப்புத் தாள்களை உபயோகிப்பதேயாகும். ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு குறிப்புத்தாள் அட்டையும் (Assignment card) ஆசிரியரிடம் ஒரு குறிப்பு விளக்க அட்டையும் (Assignment Chart) இருக்க வேண்டும்.

நூல்        :               தாய்மொழி போதிக்கும் முறை (1942), பக்கம் – 23

நூலாசிரியர்         :               வி. கே. சேசாத்திரி, பி.ஏ., எல்.டி.,

                                ⁠(சென்னை கல்வி இலாகா)

918. Individual Method – தனிப்பயிற்சி முறை

919. Assignment        – குறிப்புத்தாள்

920. Oral       –    வாய்மொழி

921. List of words     –     சொற்பட்டியல்

922. Vocabulary      –    சொல்லகராதி

923. Flash – Card       –  மின்னட்டை

924. Punctuation Marks –  மாத்திரைப் புள்ளிகள்

925. Creative Expression     –   ஆக்கச் சொல்வன்மை

நூல்        :               தாய்மொழி போதிக்கும் முறை (1942)

                                ⁠அரும்பத அகராதி, பக்கங்கள் – 2, 3

நூலாசிரியர்         :               வி. கே. சேசாத்திரி, பி.ஏ., எல்.டி.,

                                ⁠(சென்னை கல்வி இலாகா)

926. Circus – அலைக்களம்

வியாசம் – வாய்மொழி வியாசத்துக்கும் பிறகு எழுதும் வியாசம் சுயமான சொல் வன்மையின் அவசியம் – சம்பாசணை, சம்வாதம், மாணவர்களால் பொறுக்கி எடுக்கப்பட்ட பழக்கமான விசயங்களில் பிரசங்கங்கள் – (2-ம்) ஒரு மழை நாள் அனுபவம், பொருட் காட்சிச் சாலையைப் பார்வையிடுதல், அலைக்களம்.

நூல்        :               தாய்மொழி போதிக்கும் முறை (1942), பக்கங்கள் – 7, 8

நூலாசிரியர்         :               வி. கே. சேசாத்திரி, பி.ஏ., எல்.டி.,

                                ⁠(சென்னை கல்வி இலாகா)

927. Degree – மாத்திரை

வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் இந்தச் சில்லாவிலுள்ள மற்ற பாகங்கள் காற்றும் மழையுமின்றி வருந்தும் போது இங்கே இந்த நல்ல காற்றும் இளமழையுங் கிடைக்கின்றன. மழை பெய்தாலும் பெய்யாவிடினும் இக்காலக் கருமேகங்களினூடே பச்சை மரங்கள் கொடிகள் முகந்து வீசுகினற காற்றானது சூரிய வெப்பத்தை 15 மாத்திரை (Degree) வரை குறைத்து மனதுக்கு இரம்மியமானதும் உடலுக்கு உகந்ததாகவுமுள்ள ஒரு அரிய சீதோசுண நிலையைக் கொடுக்கின்றது.

நூல்        :               திருக்குற்றாலத் தல வரலாறு (1943), பக்கங்கள் : 9, 10

நூலாசிரியர்  :    ஏ. சி. சண்முக நயினார் பிள்ளை, பி.ஏ., பி.எல்.

                                ⁠(திருக்குற்றால நாதசுவாமி கோயில் தருமகர்த்தர்)

928. Beauty Spot – அழகின் உறைவிடம்

ஐரோப்பியர்களே முதன் முதல் உடல்நலங் காரணமாக இங்கு வந்ததால் தங்கள் பெல்சிய நாட்டிலுள்ள ஃச்பா என்னும் ஆரோக்யத் தலம் போன்று நீர்வளம் நிரம்பி உடல் நலம் கொடுக்கும் தலமென்று இவ்வூரை வியந்து தென்னாட்டு ஃச்பா என்ற புனை பெயரிட்டனர்.

(Famous Spa of the South) இயற்கை அழகைக் கண்டு மகிழ்ந்து அழகின் உறைவிடம் (Beauty Spot) என்றும் புகழ்ந்தனர்.

மேற்படி நூல் : திருக்குற்றாலத் தலவரலாறு (1943), பக்கம் – 13

929. Radio – ஒலிபரப்பி

சில வருடங்களுக்கு முன் இவ்வூரில் நகர பரிபாலன சபை (பஞ்சாயத்து) நிறுவப்பட்டு இப்போது திருவாளர் இலஞ்சி மிட்டாதார் ஐ.கே.சுப்பிரமணிய பிள்ளையவர்கள் பி.ஏ., தலைமையில் பொதுமக்களின் சுகாதார நன்மைகளைப் பற்பல விதங்களில் கவனித்து வருகின்றது. பொதுமக்கள் நன்மைக்காக ஒரு ஒலிபரப்பி (Radio)யும், நல்ல புத்தகங்களடங்கிய வாசக சாலையும் வைத்திருக்கிறார்கள்.

மேற்படி நூல் : திருக்குற்றாலத் தலவரலாறு (1943), பக்கம் – 17

930. Department of Epigraphy – கல்வெட்டுப் பதிவு நிலையத்தினர்

இத்தலத்தைப் பற்றிய கல்வெட்டுகள் ஏராளமாக உள்ளன. இவற்றைத் தென்னிந்தியக் கல்வெட்டுப் பதிவு நிலையத்தினர் (Department of Epigraphy) எடுத்து எழுதியிருக்கின்றனர். அவை 1895ஆம் வருடத்து 203, 204 எண்களுள்ள கல்வெட்டுகளாக எழுதப்பட்டு தென்னிந்திய சிலா சாசனங்கள் பகுதி 5இல் 767, 768ஆம் எண்களாக வெளிவந்துள்ளன.

மேற்படி நூல்       :               திருக்குற்றாலத் தலவரலாறு (1943), பக்கங்கள் : 42, 43,

                                ⁠(திருக்குற்றால நாதசுவாமி கோயில் தருமகருத்தா)

(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்