Monday, February 26, 2024

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1071- 1078

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1066-1070 – தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1071- 1078

(கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

  1. அறுவை – துணி
  2. சவளி – ஆடை
    அறுக்கப்படுவதனால் அறுவை என்றும், துணிக்கப்படுவதனால் துணி என்றும், சவண்டிருப்பதனால் சவளி என்றும் ஆடை பல பொதுப் பெயர் பெறும். சவளுதல் – துவளுதல். மென் காற்றிலும் ஆடுவது (அசைவது) ஆடை, சவளி என்னும் தமிழ்ச் சொல் த்ஜவளி என்று தெலுங்கிலும் ஜவளி என்று கன்னடத்திலும் எடுப்பொலியுடன் ஒலிக்கப்படுவதாலும், நாம் அவ்வாறே தமிழிலும் ஒலிப்பதாலும், வடசொல்லென்று தவறாகக் கருதப்படுகின்றது.
    வடமொழியில் இச்சொல் இல்லை. எனவே ஜவுளிக்கடை, ஜவுளி வாணிகம் என்பன சவளிக்கடை, சவளி வாணிகம் என எழுதப்படுதலே பிழையற்றதாம்.
    இதழ் : தேனமுதம் (மார்ச்சு 1972), அடை- 2, துளி – 13, பக்கம் – 51
  3. தேசாபிமானம்
    தந்தையே சுவர்க்கம், தந்தையே
    தருமம், தந்தையே சிறந்த தவம்;
    தந்தை மனமகிழ்ந்தால் தேவர்கள் மனமகிழ்கிறார்கள்.

குழந்தையைத் தானே சுமந்து
பெற்று வளர்ப்பதால், தாயானவள் தந்தையினும் மேல்.
பிறந்த நாடும்
சுவர்க்கத்தினு மேலானவை

  • மகா நிருவாண தந்திரம்

  • ‘இந்த நாடு என் சொந்தநாடே, என் தனையே
    தந்த நாடே என்றுமகிழ் நெஞ்சில் என்றும் எண்ணிலா –
    ஒருவன் தனையும் கண்டதுண்டோ கண்ணிலே?’
    சுகாட்டு
    இதழ் தமிழர் நேசன், தொகுதி : 11 பகுதி 2, பக்கம் :167
  1. 1074. இந்தியத் தமிழர்கள்
    திருக்குறள். இது ஆதிவேதத்திற்கு வழி நூலாகும்; இவற்றுள் செந்நாப்புலவர் யதார்த்த சீவிய சரிதம், அவரது கடவுள் வாழ்த்து மூலம், முதல் அறத்துப்பால் மூலம் இவைகளுக்கு க. அயோத்திதாச பண்டிதர், பதம், கருத்து, பொழிப்பு, அகலவுரைகளுமுண்டு. இந்தியத் தமிழர்களுக் கின்றியமையாதவனாகிய சிறந்த நூலாகும்.
    நூல் : நிகழ்காலத்திரங்கல் (1925)
    ⁠சித்தார்த்த புத்தக சாலையார்,
    கோலார் – தங்க வயல்(கோல்ட் பீல்ட்)

  1. பூவராகம் – நிலப்பன்றி
    திருத்தில்லையில் வேளாளர் குலத்தில் வைணவ சமயத்தில் ஆ. பூவராகம் பிள்ளை 1899 ஆம் ஆண்டு நவம்பர்த்திங்கள் இருபத்தேழாம் நாள் பிறந்தார். தந்தையார் பெயர் ஆதிமூலம் பிள்ளை.
    1076. சித்ரம் – அழகு
    1077. கரி – கைம்மா (யானை)
    1078. காந்தன் – கணவன்

(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்

Monday, February 19, 2024

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1066-1070



(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1061-1065 – தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1066-1070

(கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

  1. Border – வரம்புகள்
    பூஞ்செடிகளைக் சூழ்ந்து கோலப்பட்டிருக்கும் வரம்புகளில் விதவிதமான கள்ளிகளும், கீரைகளும், புற்களும், சிறு செடிகளும் உள்ளன. ஐரோப்பியரது பங்களாக்களிலேயே பூக்கள் பறிக்கப்படாமல், கொத்துக் கொத்தாகச் செடிகளிலே புன்முறுவல் தவழும் இன்முகத்துடன் மிளிர்கின்றன.
    நூல் : தமிழ்நாடு பயணக் கட்டுரைகள் (1968), பக்கம் : 147
    எழுதியவர் : அரு. சோமசுந்தரம், ஊழியன் 21-9.1926
    தமிழ் வாரப் பத்திரிகை, காரைக்குடி.

தொகுப்பு : ஏ. கே. செட்டியார்

  1. Under Ground Drainage – புதை சாக்கடை
    ‘எனக்கு அண்டர்கிரவுண்ட் ட்ரெயினேஜ்’ என்பதற்குத் தமிழில் எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை. நினைத்துக் கொண்டேயிருந்தேன்; சரியான சொல் கிடைக்கவில்லை. சில திங்கள் சென்றபின் ஒரு சிற்றூருக்குச் சென்றிருந்தேன்; அங்குள்ள ஒருவரிடம் என்னய்யா உங்களூரில் வளர்ச்சித் திட்டங்களெல்லாம் எப்படி? என்று கேட்டேன். அவர் விளக்குகள், சாலைகள் போடுவது போன்றவற்றைக் கூறிவிட்டுப் ‘புதை சாக்கடையும்’ அமைக்கப் போகிறார்கள் என்றார்.
    எனக்குப் புதையல் கிடைத்தது போலத் தனித்தமிழ்ச் சொல் கிடைத்தது. Under Ground Drainageகுப் புதை சாக்கடை என்ற சொல் எவ்வளவு பொருத்தம். இது போன்ற வளமான சொற்களைக் கொண்டவர்கள் நாம்.
    இதழ் : தமிழ்ப் பாவை 7, 11. 1967, மலர் -7 இதழ் – 11
    சொற்பொழிவாளர் : கி. ஆ. பெ. விசுவநாதன்
  2. கடிகாரம் – காலக் கருவி
    அறிவுடையவர்களாகத் தங்களைத் தாங்களே மதித்துக் கொண்டிருக்கும் செல்வர் சிலருக்கு முன்னுண்டது நன்கு செரித்துவிட்டது எனத் தாமறிந்து கொள்ளாமல், அறிவற்ற பொருளாகிய காலக் கருவி (கடிகாரம்) அதனையுணர்த்த, மேலும் மேலும் பஞ்சுப் பொதியடைப்பது போல வயிற்றை அடைத்துத் தமது அருமை உடலைக் கெடுத்துக் கொள்கிறார்களே! இஃதென்ன அறியாமை!
    நூல் : கட்டுரைப் பொழில் (1958), பக்கம் 15
    நூலாசிரியர் : பெருஞ்சொல் விளக்கனார். முதுபெரும் புலவர்
    அ. மு. சரவண முதலியார்
    (1936ல் நிகழ்த்திய பெரிய புராணச் சொற்பொழிவிலிருந்து எடுக்கப் பெற்றது.)
  3. மன்னார் கோயில் – மன்னார்குடி
    நூல் : மன்னார்கோயிற் புராணம் (1855)
    நூலாசிரியர் : திரிசிரபுரம் மகாவித்வான் கோவிந்த பிள்ளை, கோயில் குடி
  4. சொற்பொழிவு
    உபந்யாசம், பிரசங்கம் என்ற சொற்களுக்குப் பதிலாகத் தற்போது தமிழ் மக்களிடையே சொற்பொழிவு எனும் அழகான சொல்லை உருவாக்கியவர் திருநெல்வேலியைச் சேர்ந்த பால்வண்ண முதலியார் என்பவராவார். எப்படி மேடையில் பேசுவது என்பது பற்றிச் சொற்பொழிவாற்றுப்படை என்ற பெயரில் ஒரு சிறந்த நூல் இயற்றினார். உபந்நியாசம் என்பதற்குப் பதிலாகச் சொற்பொழிவு என்ற புதிய தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தியதற்காக அவரை அக்காலத்தில் பலர், ‘அதோ சொற்பொழிவு போகிறது’ என்று கேலி செய்தனராம்!
    இதழ் : (கலைவாணன் (25, 9, 1961), மலர் – 2. இதழ் – 21.

(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்

Monday, February 12, 2024

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1061-1065

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1048-1060 – தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1061-1065

(கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

  1. இண்டர்வியூ – நேர்காணல்
    வினா – விடை என்ற இண்டர்வியூ முறையை ஆங்கிலேயர் அறிமுகப்படுத்தினர். அதனை நேர்காணல் என்னும் தனித் தமிழ்ச் சொல்லால் முதன் முதல் குறிப்பிட்டவர் வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளார்தான்
    பாபநாசம் குறள்பித்தன்
    நூல் : முதன் முதலாக உலகில் நடந்த நிகழ்ச்சிகள், திசம்பர் 1992
  2. கவிராத்திரி – பாடல் இரவு
    தமிழமுத மன்றத்தின் சார்பில், கவிஞரும் மருத்துவருமாகிய ச. அறிவுடை நம்பி அவர்களது மருத்துவ மனையில் 7.11.1992 அன்று மாதாந்திரப் பாடல் இரவு (கவிராத்திரி) சிறப்பாக நடைபெற்றது.
    இதழ் : முத்தமிழ் முரசு, 21.12.92
    ஆசிரியர் : மு. சுப. கருப்பையா, தஞ்சை
  3. Treadle – மிதித்தியக்கும் அச்சுப் பொறி
    1933இல் கல்விக் கழகத்துக்கு மிதித்தியக்கும் அச்சுப் பொறி (Treadle) ஒன்று வாங்கி ஒர் அச்சகம் நிறுவப் பெற்றது.
    இதழ் : செந்தமிழ்ச் செல்வி, மார்ச்சு 1973, சிலம்பு : 47; பரல் – 7 பக்கம் : 366
    கட்டுரையாளர் : வ. சுப்பையா பிள்ளை
  4. Complimentary Copy- அன்பிதழ்
    இதழ் : விடுதலை, நாள் :10, 7. 2001
  5. செராக்(கு)சு – ஒளியச்சு
    மு. இளங்கோவன்
    தமிழ் ஆராய்ச்சியாளர்
    பாரதிதாசன் பல்கலைக் கழகம்
    திருச்சிராப்பள்ளி – 620 024
    (6. 12, 95 – அவர் எழுதிய கடிதத்திலிருந்து)

(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்

Monday, February 5, 2024

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1048-1060

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1041 – 1047 : தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் :

1048-1060

(கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

  1. சைக்கிள் சாப் – மிதிவண்டி நிலையம்
  2. பிரஸ் – அச்சகம்
  3. சலூன் – முடி திருத்தும் நிலையம்
  4. சவுளிக்கடை – துணிக்கடை
  5. மளிகைக்கடை – பலசரக்குக் கடை
  6. செனரல் ச்டோர்சு – பல பொருள் நிலையம்
  7. போட்டோ ச்டுடியோ – நிழற்பட நிலையம்
  8. ரெசுடாரண்ட் காபி கிளப் டீ ச்டால் – சிற்றுண்டிச் சாலை
  9. ஓட்டல் – உணவு விடுதி
  10. (இ)லாண்டரி – வண்ணப் பணிமனை
  11. டைலரிங் மார்ட் – தையற்கடை
  12. ஐசு கூலிங் – சுவைநீர் நிலையம்
  13. மருந்து சாப் – மருத்துக் கடை

இங்ஙனம்
மறைமலையடிகள் மன்றத்தார்
பாபநாசம் (தஞ்சை மாவட்டம்) புலவர் உசேன் செயலாளர் பாபநாசம்
மறைலையடிகள் மன்ற இரண்டாம் ஆண்டு விழா அழைப்பிதழ்

(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்